அவள் என்னை ஏமாற்றிவிட்டால்… இளம் மனைவி விட்டுட்டு போனது குறித்து பப்லு வேதனை…

0
Follow on Google News

நடிகர் பப்லு முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த சில வருடங்களாக கணவன் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு ஷீத்தல் என்ற 23 வயது பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டதாக செய்தி பரபரப்பானது. இதை தொடர்ந்து பப்லு பேட்டி மூலம் எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கோம் என ஓபனாக உடைத்தார். இருவருக்கும் கிட்டத்தட்ட 30 வயதுக்கு மேலான வித்தியாசம் என்பதால் ரசிகர்களே இதெல்லாம் சரியில்லை என்ற அளவுக்கு நக்கல் அடித்தனர்.

ஆனால் இவர் ஷீத்தலை கப் கேக் எனக் கொஞ்சுவதும், வானத்தில் ப்ரோபோஸ் செய்த வீடியோவையும் யூட்யூப்பில் வெளியிட்டு கடுப்பேத்தி வந்தனர். இந்நிலையில் ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாவில் பிரித்விராஜுடன் எடுத்துக்கொண்ட வீடியோ, புகைப்படங்களை மொத்தமாக நீக்கி இருக்கிறார். பப்லூவும் ஷீத்தலுடன் புகைப்படங்களை மொத்தமாக நீக்கி இருக்கிறார்.

இதனால் இவர்கள் பிரிந்து விட்டனர் என்று தகவல்கள் பரவின. அதுமட்டுமின்றி ஷீத்தல் வெளியீட்ட வீடியோவில் ரசிகர் ஒருவர் நீங்கள் பிரிந்துவிட்டீர்களா? என கேள்வி கேட்டதற்கு பதில் சொல்லாமல் லைக் செய்து இருக்கிறார். இதனால் எல்லாரும் திட்டி திட்டியே ஒரு ஜோடி காலி ஆகிவிட்டதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், பப்லு பிரித்திவிராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று நான் எங்கேயாவது கூறினேனா..? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா..? நீங்களாக நாங்கள் பிரிந்து விட்டோம் என்கிறீர்கள்.. நீங்களாக நாங்கள் சேர்ந்து விட்டோம் என்கிறீர்கள். மேலும், ஷீத்தல் குறித்து அனைத்து கேள்விகளுக்கும் ஒரு விதமான விரக்தியான மனநிலையிலேயே பதில் அளித்தார்.

இவ்வளவு நாள் நான் ஏமாந்துவிட்டேன். இனியும் அவளை நம்பி நான் ஏமாறப்போவதில்லை… என்னுடைய வாழ்க்கையை நான் வாழப்போகிறேன் என தெரிவித்த பப்லு, தனது 20 வயதில் தன்னுடன் பழகிய பெண் ஒருவர் இன்றும் போன் செய்து ‘பப்லு இன்னமும் நீ அழகாக இளமையுடன் இருக்கிறாய்’ என கூறியதாகவும் மேலும் தான் இன்றும் கண்ணனாகவே வாழ்கிறேன். அதனால் யார் என்னை விட்டு சென்றாலும் அதை பற்றி கவலை படபோவதில்லை… நான் ஒரு அழகான இளமையான தோற்றத்துடன் இருப்பதாகவும் தற்பெருமை பேசியுள்ளார்.

மேலும், நான் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன், இனி மேலும் திருந்தவில்லை என்றாள் நான் முட்டாள் என்று அர்த்தம், இப்போது தான் எல்லாமே புரிகிறது என்று விரக்தியாக பேசினார். அது மட்டும் அல்லாமல் நான் என்னுடைய ஜட்டியை தெருவில் கழுவ விரும்பல என்று சொல்லி தனக்கும் ஷீத்தலுக்கும் இருக்கும் பிரச்சனையை வெளிப்படையாக பேச விரும்பவில்லை என்று முடித்திருக்கிறார்.

மேலும், கடவுள் எனக்கு துரோகம் செய்துவிட்டார், சினிமாவில் வாய்ப்பு, அழகு, நல்ல உடலை கொடுத்த கடவுள் வாழ்க்கையை தொங்கலில் விட்டு விட்டார் என்று மன வேதனையுடன் பேசினார். இதன் மூலம் இருவரும் பிரிந்து தான் இருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கணிக்க முடிகிறது. மேலும் அவர்கள் இருவரும் பிரிந்தது உண்மை தான் என்ற முடிவுக்கு தற்போது வந்துள்ள இணைய வாசிகள், தாத்தா வயதில் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டு கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுன பப்லு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.