வளர்த்துவிட்ட ஏ.ஆர்.முருகதாஸை கேவலமாக நடத்திய அஜித்… கிழிந்தது அஜித்தின் போலி முகத்திரை..

0
Follow on Google News

லட்சக்கணக்கான ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்பட்டு வந்த அஜித், சமீப காலமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார், மேலும் அஜித்தின் போலி முகத்திரை நாளுக்கு நாள் கிழிக்கப்பட்டு வருவதால், அட கடவுளே இவரையா, இத்தனை நாட்களாக தலையில் வைத்து கொண்டாடி வந்தோம் என அவருடைய ரசிகர்களே பலரும், இதுவரை அஜித் ரசிகராக இருந்ததற்கு வெட்க படுகிறோம் என அஜித்தை வெறுத்து வரும் சம்பவங்கள் அரங்கேறி வருவதை பார்க்க முடிகிறது.

அதாவது அஜித் அவரை வாழ வைக்கும் சினிமாவை மதிப்பது கிடையாது, அவருக்கு வாழ்க்கை கொடுத்த ரசிகர்களை மதிப்பது கிடையாது, சக இயக்குனரை மதிப்பது கிடையாது,ஏன் அவருடைய நெருங்கிய நண்பர்களை கூட அஜித் மதிப்பது கிடையாதாம், அதாவது ஒரு முடிவை அஜித் எடுத்துவிட்டு, அது குறித்து அவருடைய நண்பர்களை அழைத்து இதை நான் செய்யவா.? வேண்டாமா.? என ஆலோசனை செய்வாராம் அஜித்,

அப்போது அஜித் நண்பர்கள் இதெல்லாம் வேண்டாம், சரியாக இருக்காது என தெரிவதால், நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன் அதனால் கண்டிப்பாக இந்த விஷயத்தை செய்ய போகிறேன் என அஜித் நண்பர்களிடம் தெரிவிப்பாராம், அதாவது ஏற்கனவே இவர் முடிவை எடுத்துவிட்டு, பிறகு எதற்கு நண்பர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும், அந்த வகையில் நான் செய்வது தான் சரி என்பது போன்று அவருடைய நண்பர்களிடம் ஒரு சர்வாதிகாரி போன்று நடந்து கொள்வாராம் அஜித்.

இது போன்று அஜித்தின் நடவடிக்கைகளுக்கெல்லாம் ஒத்து போகின்ற்றவர்கள் தான் அஜித்திடம் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியுமா, இல்லை என்றால் அவர்களை கழட்டி விட்டு விடுவாராம் அஜித், அந்த வகையில் அஜித்தின் நண்பர்களாக இருக்க கூடியவர்கள் கூட தொடர்ந்து அவருடைய நட்பில் இருந்து வருவது கூட மிக பெரிய சாதனை தான் என்றே சொல்லலாம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

இந்நிலையில் அஜித் இன்று சினிமாவில் மிக பெரிய உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான், காரணம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படம் அவருடைய சினிமா கேரியரில் மிக பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி ஒரு ஆக்சன் ஹீரோவாக அடையாளம் படுத்தியது, இந்த படத்தில் இருந்து தான் அஜித்தை தல தல என்று ரசிகர்கள் அவரை தலையில் வைத்து கொண்டாட தொடங்கினார்கள்.

அந்த வகையில் தல என்கிற அடைமொழியை கொடுத்த தீனா படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அவருக்கு அது தான் முதல் படம் என்பதால் சில லட்சங்கள் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் பின்பு ரமணா போன்ற மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் சம்பளம் கோடிகளை தொட்டது, மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டானார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அஜித் நடிக்கும் படம் குறித்து தயாரிப்பாளரிடம் அஜித் பேசி கொண்டிருக்கையில், இந்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு எவ்வளவு சம்பளம் என அஜித் கேட்க, அதற்கு 1 கோடி முடிவு செய்யப்ட்டுள்ளது என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார், உடனே அஜித் 1 கோடியா.? அந்த ஒரு கோடியை அடுக்கி வைத்தால், அந்த உயரமாது இருப்பானா ஏ.ஆர்.முருகதாஸ் என நக்கலாக பேசிய அஜித்.

அவ்வளவு பணமெல்லாம் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு கொடுக்க வேண்டாம் என மட்டமாக பேசியுள்ளார், ஒரு கட்டத்தில் பல்வேறு பிரச்சனை காரணமாக இந்த படம் தொடங்காமலே கைவிடப்பட்டது, இதன் பின்பு ஏ.ஆர். முருகதாஸ், கஜினி, 7ம் அறிவு, துப்பாக்கி என பல மெகா ஹிட் படங்கள் கொடுத்து மிக பெரிய உயரத்துக்கு சென்றதெல்லாம் தனி கதை, ஆனால் தீனா படத்தின் மூலம் அஜித் சினிமா வளர்ச்சிக்கு துணையாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸை தலைக்கனத்துடன் மிக கீழ்த்தரமாக அஜித் நடந்து கொண்ட இந்த சம்பவம் தற்பொழுது வெளியாகியுள்ளது, இவரெல்லாம் மனுசனா என பலரும் அஜித்தை கடுமையாக விமர்சனம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..