காது அருகில் நடிகர் அஜித்துக்கு பிரச்சனை… மருத்துவர் கொடுத்த ரிப்போர்ட் என்ன.?

0
Follow on Google News

நடிகர் அஜித் அண்மையில் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அவர் வீடு திரும்பியுள்ளதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் சினிமா சூட்டிங், மற்றொரு பக்கம் பைக்கில் வேர்ல்ட் டூர் என்ன பிசியாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் அஜித்.

இயக்குனர் மகில் திருமையணி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அஜித், அவ்வப்போது வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மாஸ் காட்டி வந்தார். அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவும் வெளிவராததால் கவலையில் இருந்த அஜித் ரசிகர்கள், அடிக்கடி சோசியல் மீடியாவில் வெளியான அஜித்தின் போட்டோக்களை வைரலாக்கி கொண்டாடி வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அவரது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை சென்னையில் கொண்டாடியிருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகமூட்டியது. இப்படியான நிலையில்,திடீரென நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினியுடன் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாகவும், மருத்துவர்கள் அஜித்துக்கு பல்வேறு செக்கப் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்தி இணையத்தில் காட்டுத் தீயாய் பரவவே அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இனிய வாசிகள் பலரும் அஜித்துக்கு என்ன ஆச்சு, என்ன சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போய் இருக்கார் என்று பலவாறு கேள்விகள் எழுப்ப ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் அஜித்துக்கு காதுக்கு அருகில் ஏதோ வீக்கம் இருப்பதாகவும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சரி செய்து இருப்பதாகவும் போலியான செய்திகள் பரவி வந்தன.

இதை அடுத்து, நடிகர் அஜித் சாதாரண மெடிக்கல் செக்கப்-காக மட்டுமே மருத்துவமனைக்கு சென்று இருந்ததாக அஜித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அஜித்தின் உடல் நலன் பற்றி இணையத்தில் பரவி வந்த போலியான செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த அஜித், ஒரு வாரத்திற்கு வீட்டில் ஓய்வெடுக்க போவதாகவும் அதன் பிறகு மீண்டும் அதர்வைதானில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
,