ஆதாரத்தோடு அருவருப்பான அரபு தேச வரலாற்றை வெளியிட நாங்களும் தயார்.! ஆளுர் ஷா நவாஷை எச்சரித்த மரித்தாஸ்.!

0
Follow on Google News

இந்து மனு தர்மத்தில் இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனை தொடர்ந்து திருமாவளவனுக்கு எதிராக கடும் எதிப்பு கிளம்பி வரும் நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் திருமாவளவன் பேசியதற்கு ஆதரவு தெரிவித்து இந்து மனு தர்மம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆளூர் ஷாநவாஸ் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான கண்டனம் எழுந்து வருகிறது, பிரபல எழுத்தாளர் மரித்தாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், திருமாவளவன் பின்னால் இருக்கும் திக கும்பல் திமுக ஆதரவு கும்பல் மதக் கலவரத்தை உருவாக்கத் துடிக்கிறது. ஆளுர் ஷா நவாஷ் இந்து மதம் சார்ந்து பேசினால் நானும் ஆதாரத்தோடு அருவருப்பான அரபு தேச வரலாற்றைப் பேசுவேன் என எச்சரிக்கை விடுத்த மரித்தாஸ்.

ஒரு இஸ்லாமியர் இந்துக்களைப் பேசத் தேவை இல்லை, பேசினால் தக்க பதில் கொடுக்கப்படும். பார்க்கலாம்! இதுவரை சகித்து கொண்டோம் இனி அப்படி ஒரு பொழுதும் சகித்து கொள்ள முடியாது. பிரான்ஸ் ஆசிரியர் தலையை துண்டித்த கூட்டம் பேச என்ன தகுதி இருக்கு? என்ன வரலாறு இருக்கு? வரலாறு வெறுப்பு பேச வேண்டும் என்றால் அரபு தேசத்தை விட கொடூரமான வரலாறு வேறு எங்கு உண்டு? ஆதாரத்தை வெளியிட்டு விவாதத்தை கிளப்ப நாங்களும் தயார் என சவால் விடுத்த மரித்தாஸ்.

மேலும், திமுக திக கும்பலுக்கு இந்துகள் எதிர்வினை காட்ட முழுமையாக தயார். இந்து இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையை கெடுக்கும் கும்பல் இந்த திக கும்பல். இதை தடை செய்தாலே பாதி அமைதி கிடைக்கும் என மாரிதாஸ் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து ஆளூர் ஷாநவாஸ் சர்ச்சைக்குரிய இந்து மனு தர்மம் குறித்த பதிவுக்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியுள்ள நிலையில், அந்த சர்ச்சைக்குரிய பதிவை தனது சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளார் ஆளூர் ஷாநவாஸ்.