மாமனாரின் கண்முன்னே மருமகளை நிர்வாணமாக்கிய மாமியார். அவமானம் தாங்காமல் தற்கொலை…

0
Follow on Google News

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரியா. இவருடைய தந்தை பைருலால். மூன்று மாதங்களுக்கு முன்பு தனது மகளுக்கு பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்வு சந்தோஷமாக சென்ற எங்களது வாழ்க்கையில் வரதட்சணை கேட்டு கணவரின் பெற்றோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.  

இதனால் பிரியா பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை சமாதானப்படுத்த அவரது கணவரும் அவருடைய பெற்றோர்கள் பிரியாவை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். சில நாட்கள் கடந்த நிலையில் மீண்டும் வரதட்சணைக் கேட்டு மாமியார் மாமனார் கொடுமை படுத்தியுள்ளனர். கடந்த சில நாட்கள் முன்பு பிரியாவை வரதட்சனை கேட்டு அடித்துக் கொடுமை படுத்தியுள்ளனர். 

இவருடைய மாமியார் மாமனார் கண்முன்னே மருமகளை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியுள்ளார். மனம் மனவேதனை அடைந்த பிரியா வாழ்வதைவிட சாவதே மேல் என்ற விஷத்தை குடித்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரியா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அதற்கான காரணத்தை வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார். 

அதில் தனக்கு மாமியார் மாமனார் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவதை கூறியுள்ளார். மேலும் மாமனார் கண்முன்னே என்னை நிர்வாணமாக்கிய மாமியாரால் மன வேதனைக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

பிரியா தற்கொலை செய்து கொள்ளும் முன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வரதட்சணை கொடுமை காக மாமனார் கண்முன்னே நிர்வாணப்படுத்திய மாமியாரால், மருமகள் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பு உள்ளானது.