ரஜினியிடம் இருக்கும் கோடிக்கணக்கில் கருப்பு பணம்..! அவர் தொடங்கிய புதிய அறக்கட்டளை பின்னனி காரணம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் அறக்கட்டளை இணையதளம், 26 டிசம்பர் 2021 அன்று தொடங்கப்பட்டது. ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப் பட்ட இந்த அறக்கட்டளை, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி, அதன் மூலம் ஒரு முற்போக்கு சிந்தனை தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் புதியதாக தொடங்கியுள்ள இந்த அறக்கட்டளை குறித்து திடுக்கிடும் தகவலை முக்கிய சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது. நடிகர் ரஜினிகாந்த் கைவசம் இருக்கும் கோடிகனாக கருப்பு பணத்தை வெள்ளையக்குவதற்காக தான் புதியதாக அறக்கட்டளை தொடங்கியிருக்கிறார். ஒரு படத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் ரஜினியிடம் பல கோடி ரூபாய் கருப்புப் பணம் கைவசம் இருக்கிறது.

இது குறித்து தெள்ளத் தெளிவாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. புதியதாக அரசியல் கட்சி தொடங்கி அந்த கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயன்றார் ஆனால் அது அது முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் இப்போது புதிய திட்டத்தை ரஜினியின் ஆடிட்டர் ஆலோசனை அடிப்படையில் ரஜினிகாந்த் அறக்கட்டளை தொடங்கியிருக்கிறார். அறக்கட்டளை மூலம் கல்வி புரட்சி செய்யப்போவதாகவும், மாணவர்களை தேர்ச்சி பயிற்சி கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அறக்கட்டளை தொடங்கி மாணவர்களுக்கு உதவி செய்வோம்,என்றெல்லாம் அவர்கள் சொல்லவில்லை, விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவோம் என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் தொடங்க இருப்பதற்கு முக்கிய காரணம் ரஜினியிடம் இருக்கும் பல கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு தான் என அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர் என்றும்,

மேலும் அறக்கட்டளைக்கு மத்திய அரசின் வரியிலிருந்து விலக்கு தரப்படுகிறது, எனவே அறக்கட்டளை தொடங்குவதன் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்க திட்டமிட்டுள்ளார் ரஜினிகாந்த் என முக்கிய சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இது பல சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக அறக்கட்டளை தொடக்கி தொடர்ந்து நடந்தி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.