கொடுத்தத கொடுங்க .. பரிதாபத்தில் இயக்குனர் ஹரி… ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன்…

0
Follow on Google News

தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனர் என்கின்ற அந்தஸ்துடன் வலம் வந்தவர் இயக்குனர் ஹரி, இவர் இயக்கத்தில் ஐந்து படங்கள் வரை நடிகர் சூர்யா நடித்துள்ளார். இதனால் நடிகர் சூர்யாவுக்கும் மற்றும் இயக்குனர் ஹரிக்கும் நெருங்கிய நட்பு இருந்து வந்தது, ஹரி இயக்கத்தில் தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாக சூர்யா உருவெடுக்க இயக்குனர் ஹரி ஒரு முக்கிய காரணம்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் அதனை தொடர்ந்து சிங்கம் 2 என மிகப்பெரிய ஹிட் படத்தை தொடர்ந்து மிக பெரிய எதிர்பார்ப்பில் சிங்கம் 3 வெளியானது, ஆனால் சிங்கம் 3 எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை, இதன் பின்பு ஹரி இயக்கத்தில் சாமி 2 படம் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியானது அந்தப் படமும் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இரண்டு படங்கள் ஹரி இயக்கத்தில் தோல்வியை சந்தித்ததும் சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்தார் ஹரி.

தன்னை மீண்டும் சினிமாவில் நிலை நிறுத்திக்கொள்ள ஒரு ஹிட் படம் கொடுத்தாக வேண்டும் என்கின்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் ஹரி, தன்னுடைய இயக்கத்தில் அதிக படம் நடித்தவர் சூர்யா மேலும் தன்னுடன் மிக நெருங்கிய நட்பில் இருப்பதால், அடுத்த படம் சூர்யாவுக்காக கதை தயார் செய்யப்பட்டு அந்த கதையை சூர்யாவிடம் தெரிவித்து சூர்யாவிடம் சம்பந்தமும் பெற்றார் ஹரி, படத்துக்கு அருவா என பெயரிடப்பட்டது.

இந்த படத்தின் முதல் கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு, படத்தின் படப்பிடிப்புக்கான அணைத்து ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில், ஹரியின் தொடர் தோல்வியை மனதில் வைத்து கொண்டு அருவா படத்தில் இருந்து வெளியேறினார் சூர்யா. இதன் பின்பு நடிகர் அருண் விஜய்யை வைத்து அருவா படத்தின் பெயரை யானை என்று பெயரிட்டு எடுத்தார் ஹரி, இந்த படம் ஓரளவு வெற்றி பெற்றாலும் கூட எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

இந்நிலையில் தற்பொழுது மிக பெரிய சரிவில் உள்ள இயக்குனர் ஹரி, சமீபத்தில் சினிமா தொடர்பான ஸ்டூடியோ ஒன்றை புதியதாக திறந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு படம் இயக்கி தன்னுடைய சரிவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக முயற்சியில் இறங்கியுள்ள இயக்குனர் ஹரி, ஏற்கனவே அவருடைய தாமிரபரணி போன்ற ஹிட் படங்களில் நடித்த விஷாலை வைத்து மீண்டும் படம் இயக்க உள்ளார்.

இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார். புதிய படத்தின் பஸ்ட் காப்பி எடுத்து தருகிறேன் என கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டுள்ளார் ஹரி, அதற்கு அதெல்லாம் வேண்டாம், சம்பளம் மட்டும் வாங்கிகங்க என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார், மேலும் தற்பொழுது ஹரி மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்து உள்ளதால், வெறும் ஒன்றரை கோடி மட்டுமே சம்பளமாக பேசி முடிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று நடிகர் விஷாலுக்கு வெறும் 7 கோடி மட்டுமே பேசப்பட்டுள்ளது. இருந்தும் வேறு வழியின்றி கொடுத்ததை கொடுங்க என்பது போன்று, கார்த்திக் சுப்புராஜ் கொடுக்கும் மிக குறைந்த சம்பளத்தை பெற்று கொன்டு ஹரி மற்றும் விஷால் இருவரும் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.