ரஜினிகாந்துக்கு மருத்துவர் எச்சரிக்கை… பணத்திற்காக கண்டு கொள்ளாத குடும்பத்தினர்… பரிதாபத்தில் ரஜினி..!

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக உடல் நல குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் இருந்த போது, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றவர் சீறுநீரக மாற்று சிகிச்சைக்கு பின்பு, தமிழக மக்களின் பிரார்த்தனையின் பலனாக மறுபிறவி எடுத்து தமிழகம் திரும்பினார்.

ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டபின்பு தற்பொழுது வரை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை அமெரிக்கா சென்று அவருடைய உடலை முழு பரிசோதனை செய்து வருகிறார் ரஜினிகாந்த். சிங்கப்பூர் சென்று சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்ட ரஜினிகாந்த் இனி ஓய்வு எடுக்க இருப்பதால் சினிமாவில் நடிக்க மாட்டார் என்கிற ஒரு தகவல் வெளியானது.

ஆனால், அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய ரஜினிகாந்த் அவருடைய சம்பளமும் ஒவ்வொரு படத்தின் போது உயர்ந்து கொன்டே 100 கோடியை தாண்டியது. ரஜினிகாந்த்உடல்நிலை மோசமான சூழலிலும் மேலும் அவர் ஓய்வு எடுக்க வேண்டிய இந்த காலகட்டத்தில், தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு முக்கிய காரணம் அவருடைய குடும்பத்தினர் தான் என்று கூறப்படுகிறது.

இடையில் ரஜினிகாந்த் மார்க்கெட் சரிவை சந்திக்க, தீடிரென அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், அந்த பரபரப்புக்கு மத்தியில் அடுத்தடுத்து படத்தில் கமிட்டாகி தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தது, ஆனால் அவரின் அரசியல் அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே இருந்து வந்தது. இதனால் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ஓட வைப்பதற்காக தான் இந்த அரசியல் அறிவிப்பு நாடகம் என்கிற விமர்சனம் ரஜினி மீது எழுந்தது.

தேர்தலுக்கு சில மாதங்கள் இருந்த நிலையில்,தன்னுடைய உடல் நிலையை சுட்டிக்காட்டி, மேலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தான் அரசியலுக்கு வரவில்லை என ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என தெரு தெருவாக போஸ்டர் ஒட்டிய அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ரஜினிகாந்த் உடல்நிலை மோசமாக இருக்கின்ற காரணத்தினால் அரசியலை தவிர்த்த ரஜினிகாந்த், அதே மோசமான உடலை வைத்து எப்படி சினிமாவில் நடிப்பார். அதனால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு வயதான காலத்தில் முழு ஓய்வு எடுப்பார் ரஜினிகாந்த் என்கிற ஒரு தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் வெளியான அடுத்த சில நாட்களில் ரஜினிகாந்த் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்.

மேலும் அண்ணாத்தே படம் வெளியான அடுத்த சில நாட்களில், அடுத்த படமான ஜெயிலர் படத்தில் கமிட்டான ரஜினிகாந்த், தற்பொழுது ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் ரஜினிகாந்த் கமிட்டாகி உள்ளார். சமீபத்தில் தன்னுடைய உடல்நிலையை பரிசோதனை செய்துள்ளார் ரஜினிகாந்த்.

அப்போது ரஜினிகாந்த் உடல்நிலை சற்றும் மோசமாக இருக்கிறது, அதனால் சினிமாவில் நடிக்கும் நீங்கள் உடலை வருத்திக் கொள்ளக் கூடாது, உங்களுடைய உடலை மென்மையாக பாதுகாக்க வேண்டும். உங்களுடைய உடலுக்கு ஒத்துழைப்பு தருவது போன்ற ஒரு சுற்றுச்சூழல் உள்ள இடத்தில் மட்டுமே நீங்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். கண்டிப்பாக தற்பொழுது உங்களுக்கு ஓய்வு முக்கியம் என மருத்துவர்கள் ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

மருத்துவர்கள் எச்சரித்தும், ரஜினிகாந்த் ஓய்வு எடுக்கவேண்டிய வயதான இந்த காலத்தில், மேலும் அடுத்தடுத்து அவரை படங்களில் கமிட்டாக வைத்து, பணம் கிடைக்கிறது என்கிற ஒரு நோக்கத்திற்காக ரஜினிகாந்தை ஓய்வின்றி செயல்பட வைத்து வருகிறார்கள் அவரது குடும்பத்தினர் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.