செக்ஸ் தொல்லை … பெண்ணிடம் பளார் வாங்கிய ஜேம்ஸ் வசந்த்..! நீ இசைஞானி பற்றி பேசலாமா.?

0
Follow on Google News

சுப்ரமணியபுரம் படத்தின் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், இவர் இந்த ஒரு படத்தை தவிர சொல்லுபடியாக வேறு எந்த படத்திற்கு இசை அமைக்கவில்லை. மக்கள் மத்தியிலும் இவரது இசைக்கு வரவேற்பும் இல்லை. மேலும் சினிமாவில் இசை அமைக்க வாய்ப்புங்கள் இல்லாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொழப்பை ஓட்டி வரும் ஜேம்ஸ் வசந்த் தற்பொழுது இசைஞானி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இசைஞானி ரசிகர்களிடம் வசமாக சிக்கியுள்ளார்.

SP பாலசுப்ரமணியம் மறைந்த போது இரங்கல் தெரிவித்த இசைஞானி குறித்து சர்ச்சை கூறிய வகையில் கருத்து தெரிவித்து அது எதிர்ப்புகளால் உருவெடுத்த பின்பு, அந்த கருத்தை நீக்கிவிட்டார் ஜேம்ஸ் வசந்த், தொடர்ந்து இசைஞானி மீது வன்மத்துடன் கருத்து தெரிவித்து வரும் ஜேம்ஸ் வசந்த் சமீபத்தில் இளையராஜா அவர்கள் பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இசைஞானி ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

ஜேம்ஸ் வசந்த் பாலியல் வழக்கில் சிக்கிய சம்பவத்தை இசைஞானியின் ரசிகர்கள் சுட்டி காட்டி வருகின்றனர், அதில் பல பெண்களுடன் ஜேம்ஸ் வசந்தன் தொடர்பு இருப்பது குறித்து அவரது மனைவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை சுட்டி காட்டி, நீங்க யோக்கியன் வேஷம் போட வேண்டாம் என ஜேம்ஸ் வசந்தனுக்கு பதிலடி கொடுத்து வரும் சம்பவம் தற்போது பொது தளத்தில் அரங்கேறியுள்ளது.

2014ம் ஆண்டு பல பெண்களுடன் ஜேம்ஸ் வசந்தன் தொடர்பு வைத்திருப்பதாக அவரது மனைவி சுகந்தி கொட்டிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்போது ஜேம்ஸ் வசந்த் மனைவி கொடுத்த புகார் மனுவில் தெரிவித்ததாவது. ஜேம்ஸ் வசந்தனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் தங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. விஜிபி பிரசாத் தாஸின் முன்னாள் மனைவி ஹேமலதாவும் ஜேம்ஸ் வசந்தனும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்..

முதல் மனைவி உயிருடன் இருக்கையில் விவாகரத்து வாங்காமல் எப்படி இன்னொரு பெண்ணை மனைவி ஆக்கிக் கொள்ளலாம் எனவே சட்டநடவடிக்கை எடுக்கும்படி சுகந்தி புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் நடத்த சில மாதங்களுக்கு முன்பு 2013ம் ஆண்டு செக்ஸ் குற்றச்சாட்டில் ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டார். பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக,சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராதாதேவிபிரசாத் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் வசந்தனை போலீசார் கைது செய்யபட்டர்.

மேலும் பக்கத்துக்கு வீட்டு பெண்ணுக்கு ஜேம்ஸ் வசந்த் செக்ஸ் தொல்லை கொடுத்த விவகாரத்தில், ஜேம்ஸ் வசந்த் பக்கத்து வீட்டு பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததாகவும், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு செஸ் தொல்லை கொடுக்க முயன்ற பொது, அந்த பெண்ணிடம் பளார் என அடி வாங்கியதாக கூறப்படுகிறது. அப்படி பெண்ணிடம் அடி வாக்கிய நீ இசைஞானியை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது என இசைஞானி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஜேம்ஸ் வசந்தை வெளுத்து வாங்கி வருவது குறிப்பிடதக்கது.

நன்றி மறந்த ரஜினிகாந்த்… நடுதெருவில் நிற்கும் கே.எஸ்.ரவிக்குமார்..! அஜித்தை பார்த்து கற்று கொள்வாரா ரஜினி.?