வறுமையில் வாடிய இளைஞர் வாழ்க்கையில் நினைத்த பார்க்காத மகிழ்ச்சியை கொடுத்த KPY பாலா…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பாலா சிறந்த நடிகர், காமெடியன் என்பதை தாண்டி, மனிதநேயம் மிக்கவர் என்பதை சமீப காலமாக நிரூபித்து வருகிறார் பாலா. இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஏழை சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார். தற்போது கூட மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்திருக்கிறார்.

மேலும் இதற்கு முன்பு பாலாவிற்கு ஒரு தாய் தனது மகள் சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது அவள் குறித்த வீடியோவை உங்களது பக்கத்தில் போட முடியுமா அதனால் தனது மகளுக்கு உதவுகள் வரும் என கேட்டுள்ளார். ஆனால் பாலாவோ, அந்த தாயிடம் நேரில் சந்திக்கலாமா என்று கேட்டுவிட்டு அவருடைய வீட்டிற்கே சென்று இருக்கிறார். மேலும், ஒரு லட்சம் தொகையை அவர்களிடம் கொடுத்து இருக்கிறார். அதோடு அந்த பெண்ணின் பிஸியோ தெரபி சிகிச்சைக்கு ஆகும் செலவையும் பாலாவே ஏற்று கொள்வதாக கூறி இருக்கிறார்.

குறிப்பாக, முதியோர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்தி குடுப்பது வெண்டிலேட்டர் உட்பட உயிர்காக்கும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ தேவைக்காக மக்கள் பயன்படுத்த ஆட்டோ வழங்குவது என பல சமூக சேவைகளை செய்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இப்படி தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் தான் சம்பாதிக்கும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக வாரி வாரி வழங்கி வரும் பாலா, அண்மையில் பெட்ரோல் பங்கில் வேலை செய்த ஊழியருக்கு பைக் ஒன்றை பரிசளித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சமீபத்தில் instagram முழுவதும் ரீல்ஸ் ஒன்று ட்ரெண்டானது. அந்த வீடியோவில், பைக்கர் ஒருவர் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றபோது, அங்கு வேலை பார்க்கும் இளைஞர் பைக் ஓனரிடம் இந்த கேமரா எவ்வளவு என்று கேட்கிறார். அதற்கு அந்த பைக்கர் கேமராவின் விலை 43 ஆயிரம் என்று சொல்கிறார். அதைக் கேட்டதும் இளைஞர் சிரித்துக் கொண்டே “எங்க வீட்டில பைக் வாங்க பத்தாயிரம் கேட்டாலே செருப்பால அடிப்பேன் என்று சொல்றாங்க” என்று தனது வறுமை நிலையை புன்னகைத்தபடியே கூறுகிறார்.

இந்த ரீல்ஸ் instagramல் வைரலாகவே, இந்த வீடியோ KPY பாலா கண்ணிலும் பட்டுள்ளது. இளைஞரின் வறுமையை புரிந்து கொண்ட பாலா உடனடியாக பைக் ஒன்றை வாங்கிக்கொண்டு அந்த பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட செல்வது போல சென்று இருக்கிறார். அப்போது அந்த இளைஞர் பெட்ரோல் போட வந்தவுடன் அவரது கையில் பைக் சாவியை கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் பலா.

பைக் கிடைத்த மகிழ்ச்சியில் கண் கலங்கிய இளைஞர், பாலாவை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தார். மேலும் பாலா உடன் பைக்கில் ஒரு ரைட் சென்று உற்சாகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். பின்னர் பாலா அந்த இளைஞர் உடன் ஒரு செல்பி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பாலாவின் சமூக சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தனியார் ஷோக்கள் என நிறைய கலந்துகொண்டு சம்பாதிக்கும் பாலா அதை வைத்து ஆடம்பரமாக வாழ நினைக்காமல் மற்றவர்களுக்கு உதவி வருகிறார். பெரிய பணக்காரர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை தாண்டி மனம் இருந்தால் எந்த வகையில் சாதாரண மனிதன் கூட உதவி முடிவும் என்பதை காட்டி வருகிறார் பாலா.