ஒரே நாளில் முழு படத்துக்கும் டப்பிங் முடித்த நயன்தாரா… காதலர் சொல்லிக் கொடுத்ததால் இந்த வேகமா?

0
Follow on Google News

நானும் ரௌடிதான் மற்றும் டோரா ஆகிய படங்களுக்குப் பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்காக நயன்தாரா சொந்தமாக டப்பிங் பேசவுள்ளார். நயன்தாரா தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் மலையாள படங்கள் தவிர்த்து மற்ற படங்களுக்கு சொந்தமாக டப்பிங் பேசியதில்லை. விதிவிலக்காக நானும் ரௌடிதான் படத்தில் தனக்குதானே டப்பிங் பேசினார்.

மற்ற படங்களில் எல்லாம் நயன்தாராவுக்கு தீபா வெங்கட்தான் டப்பிங் பேசி வருகிறார். இந்நிலையில் இப்போது தன்னுடைய காதலர் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு மீண்டும் தானே டப்பிங் பேசியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை இணையத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

இந்த திரைப்படம் டிசம்பர் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மொத்த படத்துக்கான டப்பிங்கையும் நயன் ஒரே நாளில் பேசி முடித்துள்ளாராம். முழு நாளும் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் கூடவே இருந்து டப்பிங் சொல்லிக்கொடுத்து வேலை வாங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.