10 ஆண்டுகளைக் கடந்த ராக்ஸ்டார் அனிருத்… திரையுலகினர் வாழ்த்து!

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் சினிமாவில் 10 ஆண்டுகளைக் கடந்துள்ளார். இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக இருப்பவர் என்றால் அது ராக்ஸ்டார் அனிருத் தான். 2013 ஆம் ஆண்டு 3 படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, ஷங்கர் என அனைத்து முன்னணிக் கலைஞர்களோடும் பணிபுரிந்துவிட்டார்.

3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ஹிட்டாக்கி, ஒரே நாளில் அவரை உலக பேமஸ் ஆக்கியது. அதன் பின்னர் அவர் இசையமைத்த படங்களின் வெற்றிக்கு எல்லாம் அவரின் இசை மிக முக்கிய பங்காற்றியது. இந்நிலையில் நேற்றோடு அவரின் திரையுலக அறிமுகம் நிகழ்ந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 30 வயதுக்குள் இசையமைப்பாளராக ஆகவேண்டும் நினைத்திருந்ததாகவும்,

ஆனால் அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன்னை மக்கள் இசையமைப்பாளராக்கி விட்டதாகவும் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார். இந்த பயணம் மேலும் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார். அனிருத்தின் இந்த 10 ஆண்டு கால பயணத்தை வாழ்த்தி திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.