கோடிகளை சுருட்ட சூர்யா தரப்பில் ஜாதி சண்டை தூண்டிவிட பட்டுள்ளதா.? பிரபல எழுத்தாளர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..

0
Follow on Google News

ஜெய்பீம் விவகாரம் குறித்து பிரபல எழுத்தாளர் மாரித்தாஸ் சில திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ஒரு நபரின் விவகாரத்தை அவர் அனுமதியோடு உரிமை பங்கீட்டுக்கான ஒப்பந்தத்தோடு படமெடுப்பர். இது உலகம் முழுவதும் இருக்கும் பொது நடைமுறை. பிரபலமான நபர் என்றால் கூட unauthorized என்று தான் எடுக்க முடியும். அனுமதி அவசியம்.

ஆனால் ஜெய்பீம் சூரியா குழு அதைச் செய்யவில்லை. இன்று சூர்யா அமேசான் பல கோடி லாபம். அதில் பார்வதிக்கான உரிமை? 40கோடி லாபத்தில் 4கோடியாது பார்வதிக்கு உரிமை உண்டு தானே! அந்த உரிமையைத் தட்டிப் பறிக்கவே பார்வதி செங்கேணி எனப் பெயர் மாற்றி சட்டச் சிக்கலை உருவாக்கிக் கொண்டது படக்குழு. இது எதார்த்தமாக நடந்தது அல்ல நிச்சயம் படக்குழு இதைத் திட்டமிட்டே செய்துள்ளது என்பேன்.

டெண்டுல்கர் ஆரம்பித்து எந்த பிரபலத்தையாவது authorized என்று உரிமை வாங்காமல் படமெடுத்தால் என்ன நடக்கும் இங்கே? சட்ட நடவடிக்கையை எதிர் கொள்ள வேண்டி வரும். சரிதானே! ஆனால் பாவி பார்வதி? அவர் இன்றும் குடிசை வீட்டில் தினமும் போராடி வாழ்கிறாள் அவள் எப்படி முடியும்! “சட்ட விவரமறியாத, சண்டை போடச் சக்தியில்லாத மக்களை யாரும் ஏமாற்றலாம்”!

ஜெய் பீம் கடந்த 5 ஆண்டுகள் முன் கூட நடந்து வரும் ஒரு மேசமான சமூக குற்றத்தை அதிகார வர்க்கத்தின் கொடூரமான முகத்தைக் காட்டுவதோடு வலியை மக்களிடம் கடத்தியுள்ளது என்பது நிச்சயம் மகிழ்ச்சி. வரவேற்று கொண்டாடப் பட வேண்டிய படமே. ஆனால் திரைக்குப் பின்னால் பணபலம் கொண்டவர்கள் மக்கள் உணர்வுகளை லாபம் சம்பாரித்ததோடு ஏமாற்றியும் உள்ளனர் என்றால் சூர்யா படக் குழுவும் இன்னொரு அந்தோணி தான்.

மீண்டும் சொல்கிறேன் “சட்ட விவரமறியாத,சண்டை போடச் சக்தியில்லாத மக்களை யாரும் ஏமாற்றலாம்”!, இதை மடைமாற்ற ஜாதி சண்டையைத் தூண்டிவிட்டுள்ளனர் படக்குழுவினர். அதற்குக் கட்சிகள் ஆதரவு இயற்கை. இதனால் எங்கே இருந்து உரிமைக் குரல் வரவேண்டுமோ அங்கே இருந்து வராமல் தடுத்தும் உள்ளனர். சூர்யா படக்குழு புத்திசாலித்தனமான அந்தோணி என மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.