திட்டமிட்டு வெளியேற்றிய பிரதீப்… பிரதீப்பை பழிவாங்கிய கமல்ஹாசன்… பின்னணியில் நடந்தது இது தானம்…

0
Follow on Google News

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே, போட்டியாளராக பங்கேற்ற பிரதீப் மிகவும் கவனத்துடன் மக்கள் மனதில் இடம் பெரும் வகையில் விளையாடி வந்தார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் டைட்டிலை பிரதீப் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்து வந்தனர். மேலும் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பிரதீப்புக்கு மக்கள் கொடுக்கும் கைத்தட்டல் மற்றும் ஆதரவு கிட்டத்தட்ட பிரதிப்புக்கு தான் இந்த சீசனின் டைட்டில் வினர் என்று உறுதி செய்யும் அளவுக்கு இருந்தது.

இந்த நிலையில் பிரதிப்பை திட்டமிட்டு சதி செய்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற நடந்த பல சம்பவங்கள் தற்போது வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பூர்ணிமா, மாயா, ஐசு இவர்கள் மூவரும் இணைந்து பிரதீப் பற்றி டிஸ்கஸ் செய்துள்ளார்கள். அதில் அவனுக்கு எதிராக நாம் செயல் படுவதற்கு இதுதான் சரியான வாய்ப்பு. தெளிவாக அடிக்க வேண்டும் என்று பூர்ணிமா, மாயா, ஐசு மூவரும் பிரதிப்பை கூறி வைத்து வெளியேற்றுவதற்கான டிஸ்கஷனில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரவீனா என்னுடைய அருணா கயறை கூட கமெண்ட் பண்ணினார் பிரதீப் என்ற ஒரு குற்றச்சாட்டை ரவீனா முன் வைத்தார். ஆனால் அதற்கு பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள யுகேந்திரன், பிரதீப் பேசும்போது நானும் உடனிருந்தேன், எல்லா இடங்களிலும் கேமரா இருக்கிறது அதனால் மிக அக்கறையுடன் தான் பூர்ணிமாவிடம் பிரதீப் இதை தெரிவித்தார், மற்றபடி தவறான ஒரு எண்ணத்தில் பிரதீப் சொல்லவில்லை என்று ஹிதேந்திரன் தெரிவித்திருந்தார்.

மேலும் பிரதீப்புக்கு எதிராக உரிமைகுரல் எழுப்புவது பற்றி மாயா, ஜோவிகாவிடம் ரகசியமாக கேட்டதாக பூர்ணிமாவிடம் தெரிவிக்கிறார், அதற்கு ஜோவிகாவும் ஓகே சொன்னதாக தெரிவிக்கிறார். அப்படி இருக்கையில் பிரதீப்பை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்கின்ற திட்டத்தில் பூர்ணிமா, மாயா, ஐசு, ரவீனா, மற்றும் ஜோதிகா ஆகியயோர் சதி திட்டம் தீட்டியுள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி கொண்டிருக்கிறது.

மேலும் தற்பொழுது மாயா, பிரதீப் என்னிடம் தவறாக நடக்கவில்லை மற்ற பெண்களுக்காகத்தான் நான் குரல் கொடுத்தேன் என்று அந்தர் பல்டி அடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த ஐந்து பெண்களும் பிரதீப்புக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பது, மற்றும் மிகத் திறமையாகவும் விளையாடி வருகிறார், இவர் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றினால் தான் நம்மில் யாராவது ஒருவர் டைட்டிலை வின் பண்ண முடியும் என்று திட்டமிட்டு அபாண்டமாக பிரதீப் இது குற்றச்சாட்டுகளை சுமத்தி வெளியேற்றி உள்ளது அம்பலமாகி வருகிறது.

இந்த நிலையில் பிரதீப் மீது கமல்ஹாசனுக்கு ஏற்கனவே கடும் கோபம் இருந்துள்ளது, காரணம் கமலஹாசனுக்கு மிக நெருக்கமாக சினிமா துறையில் இருந்தவர்களில் பாவா செல்ல துறையும் ஒருவர், இவர் மீது பிரதீப் பிக் பாஸ் வீட்டில் குற்றசாட்டுகளை தெரிவித்தார், அதாவது பாவா செல்லதுரை எச்சி துப்புகிறார், தூய்மையாக இல்லை என்று புகார் தெரிவித்தது, எனக்கு வேண்டியபட்டவர் மீதே புகார் தெரிவிப்பதா, என கமல்ஹாசனுக்கு பிரதீப் மீது கோபம் இருந்து வந்துள்ளது.

மேலும் ஒரு கட்டத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த சண்டையில் கமல் சார் சொன்னாலும், நான் செய்தது தவறு இல்லை என ஒரு கட்டத்தில் பிரதீப் ஆர்குமென்ட் செய்தது, என தொடர்ந்து கமல்ஹாசனை கோபப்படுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் ஐந்து பெண்கள் ஒன்று கூடி பிரதிப்பை திட்டமிட்டு வெளியேற்ற வேண்டும் என என்கின்ற சதி திட்டத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டார் கமல்ஹாசன் என கூறப்படுகிறது.

அதாவது பிரதீப் மீது கடும் கோபத்தில் இருந்த கமல்ஹாசன், தன்னுடைய கோபத்துக்கு பழிவாங்க இது தான் சரியான தருனம் எனபதால், பிரதீப்பை வெளியேற்றியுள்ளார், அந்த வகையில் திட்டமிட்ட சூழ்ச்சியின் காரணமாகவே பிரதீப் பிக் பாஸ் வீட்டின் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.