சிவகார்த்திகேயன் என்ன தப்பு செய்தார்… ஒரே வரியில் பதில் கொடுத்த இமான்..

0
Follow on Google News

சமீபகாலமாக இணையத்தில் வைரலாக பேசப்படும் சிவகார்த்திகேயன்-இமான் சர்ச்சை குறித்து நெட்டிசன்கள் பலவிதமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு பதிலளித்து முற்றுப்புள்ளி வைக்குமாறு செய்தியாளர் ஒருவர் இமானிடம் கேட்கவே, இமான் மனம் திறந்து பதில் அளித்துள்ளார். இமான் பதில் அளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது பல வெற்றிப்படங்களுக்கு இசையமைப்பாளர் இமான் அவர்கள்தான் இசையமைத்துள்ளார். சொல்லப்போனால், முழுக்க முழுக்க இமானின் இசையால்தான் நடிகர் சிவகார்த்திகேயன் மக்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கினார். குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அவரை பாடகராகவும் இமான் அறிமுகப்படுத்தினார். இருவரும் அண்ணன் தம்பி போன்று பழகி வந்த நிலையில், திடீரென இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை முற்றிலுமாக நின்று விட்டது.

இது தொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இமான், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் இந்த ஜென்மத்தில் அவரை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறி பிரச்சினையை கிளப்பிவிட்டார். மேலும், அவர் என்ன துரோகம் செய்தார் என்பதை என்னால் வெளியில் சொல்ல முடியாது, அது என் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று முழுமையாக சொல்லாமல் பாதியை மட்டும் கூறியிருந்தார். இமானின் இந்த பேட்டி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல், இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் தான் காரணம் என்றும் பேசப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் மொத்த இமேஜும் நொடிப்பொழுதில் நொறுங்கியது. ஆனால், சிவகார்த்திகேயன் எங்களை சேர்த்து வைப்பதற்கு தான் முயற்சி செய்தார்… அதனால் தான் இமான் இவ்வாறு குற்றச்சாட்டு வைக்கின்றார் என்று மோனிகா பதில் அளித்தார்.

மோனிகாவின் இந்த விளக்கத்துக்கு பிறகு ஒருதரப்பினர் சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்தனர். மேலும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பிடிக்காமல்தான் அவர் மேல் இப்படி கல் எறிகிறார்கள் என்று எஸ்கேவின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மற்றொரு பக்கம், இமான் தான் பாவம், SK ஏமாற்றி விட்டார் என்று இமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையில், நெட்டிசங்கள் பலரும் சிவ கார்த்திகேயனை மீம்ஸ் மூலம் ட்ரோல் செய்து வந்தனர். இவ்வாறு இமான் பற்ற வைத்த பிரச்சினை இணையத்தில் காட்டுத் தீயாய் பரவியது. இப்போது வரை சிவகார்த்திகேயன் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் இமானிடம் இந்த பிரச்சினை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இமானை பேட்டி எடுத்த செய்தியாளர், இணையத்தில் சிவகார்த்திகேயன் சர்ச்சை குறித்து பலவாறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நீங்கள் தான் பதிலளித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இமானிடம் கூறினார். அதற்கு இமான், எது சரி எது தவறு என்பதை மனிதர்களை விட இறைவன் நன்கு அறிவார். எல்லாம் இறைவனுக்குத் தெரியும். அவர் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று பதில் அளித்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும், அப்போ இந்த என்ன பிரச்சினைன்னு கடைசி வரை யாரும் சொல்ல மாட்டீங்க என்று கமென்ட் செய்து வருகின்றனர்.