பணத்தை வாங்கிட்டு டிமிக்கி கொடுக்கும் ஜெயம் ரவி… போயஸ் கார்டனில் வீடு வாங்கியது இப்படி தானா.?

0
Follow on Google News

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக மாறியவர் ஜெயம் ரவி. இவரின் அப்பா எடிட்டர் மோகன். பல திரைப்படங்களுக்கு எடிட்டிங் செய்தவர். ரவியின் அண்ணன் ராஜா இயக்குனர். ஜெயம் ரவியை வைத்து பல திரைப்படங்களை இயக்கியவர். ஜெயம் படத்திற்கு பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை ரவி உருவாக்கினார்.

ஆனால் ஜெயம் ரவியின் வெற்றி மேலும், கீழும் ஆக தான் தாவிக்கொண்டே இருக்கிறது. ஒரு படத்தின் மூலம் வெற்றி அடைந்தால் அடுத்த படம் படுதோல்வியாக மாறுகிறது. இதற்கிடையில் இவருக்கு அதிகமாக ஹிட் படத்தை கொடுத்து தூக்கி விட்டவர் இவருடைய அண்ணன் மோகன் ராஜா மட்டும் தான். இவரை தவிர மற்ற எந்த இயக்குனர்களிடம் படம் நடித்தாலும் ஏதோ சுமாரான வரவேற்பு மட்டும் தான் கிடைத்தது.

ஆனால் இவை அனைத்தையும் மாற்றியதுதான் மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம். இத்திரைப்படத்தின் மூலம் உச்சத்திற்கே சென்றார் ஜெயம் ரவி. படத்தின் வெற்றியால் தனது சம்பளத்தையே கூட்டினார். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டும் வருகிறார். தற்போது இறைவன், சைரன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதில் இறைவன் படம் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடிவடையாததால் படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் கதாநாயகி நித்யா மேனன். தற்போது அவரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘தனி ஒருவன்’ திரைப்படம் வெளியாகி ஆகஸ்ட் 28-ம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அன்று இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது நிறைய படங்களில் கமிட் ஆகியுள்ள ஜெயம் ரவிக்கு அதுவே மிகப்பெரிய ஆப்பாக மாறியுள்ளது.

ஜெயம் ரவி சில ஆண்டுகளுக்கு முன் புதிய வீடு கட்டினார். அதற்கான நிதி உதவியை ஸ்கிரீன் சீன் என்ற தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக நடிகர் ஜெயம் ரவி, ஸ்கிரீன் சீன் நிறுவனத்திற்கு மூன்று படங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும் இந்த மூன்று படங்களை முடிக்கும் வரை வேறு எந்த படங்களிலும் நடிக்க கூடாது,

பொன்னியின் செல்வன் படத்தை மட்டும் முடித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது என கூறபடுகிறது. ஆனால் ஜெயம் ரவியோ ஒப்பந்தப்படி நடக்காமல் பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் ஒப்பந்தப்படி கல்யாண் என்பவர் இயக்கத்தில் அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் படு தோல்வி அடைந்தது.இப்படம் தோல்வி அடைந்ததற்கு ஜெயம் ரவியும் ஒரு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

அதாவது, இந்த படம் உருவானபோது ஜெயம் ரவியே அவரே எடிட்டிங் அறையில் அமர்ந்து பல காட்சிகளை மாற்ற சொல்லியிருக்கிறார். ஜெயம் ரவி சொன்ன மாற்றங்கள் செய்யப்பட்டு வெளிவந்த அகிலன் படம் படுதோல்வியை சந்தித்தது.‌காட்சிகளை எப்படி அமைக்க வேண்டும் என்பது இயக்குனருக்கு தெரியும். ஜெயம் ரவியின் அப்பா மோகன் எடிட்டராக இருக்கலாம். ஆனால் ஜெயம் ரவி எடிட்டர் இல்லையே என திரை துறையினர் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் ஒப்பந்தத்தின்படி சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ். இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அதே சமயத்தில் மற்ற படங்களிலும் நடித்து வருகிறார். இது ஒப்பந்தத்தின்படி எதிராக உள்ளதால் தயாரிப்பாளர்கள் இவரின் மேல் நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்க முடிவெடுத்துள்ளார்களாம். இதனால் இவருடைய இமேஜ் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் மொத்த மார்க்கெட்டும் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.