வேண்டாவே வேண்டாம் என மறுத்த ஷாலினி… கெஞ்சி ஒரு வலிக்கு கொன்டு வந்த அஜித்…

0
Follow on Google News

இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான காதல் மன்னன் படம் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இதன் பின்பு மீண்டும் இயக்குனர் சரணுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் விதத்தில் அமர்க்களம் படத்தில் காமிட்டானார் நடிகர் அஜித். அப்போது அஜித் ஜோடியாக எந்த நடிகை என்ற ஒரு பேச்சு வார்த்தை வரும் போது, அதற்கு அஜித் நீங்கள் யாரையும் வேண்டுமானால் தேர்வு செய்து கொள்ளுங்கள் என இயக்குனர் சரனிடமே முழு பொறுப்பை ஒப்படைத்து விட்டார்.

உடனே அந்த காலகட்டத்தில் காதலுக்கு மரியாதை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், அந்த படத்தில் நடித்த ஷாலினியை தேர்வு செய்கிறார் இயக்குனர் சரண், உடனே ஷாலினியின் தந்தையிடம் சரண் பேசும்பொழுது அதற்கு ஷாலினியின் தந்தை, தன் மகள் இனி படத்தில் நடிப்பதாக இல்லை என்ற முடிவில் இருக்கிறார். மேலும் அடுத்தடுத்து மேல் படிப்பு படிக்க இருப்பதாகவும் சொல்லிவிட்டார், இருந்தாலும் என்னுடைய மகளிடம் நேரடியாக நீங்கள் பேசிப் பாருங்கள் என்று ஷாலினியின் தந்தை பாபு தெரிவித்துள்ளார்.

இதன் பின்பு நடிகை ஷாலினியை சந்தித்து சரண் பேசியபோது, அதற்கு ஷாலினி இல்ல சார் நான் படத்தில் இனி அடிப்பதாக இல்லை, சிறுவயதில் இருந்து எனக்கு நடித்து நடித்து போரடித்து விட்டது, அடுத்து மேற்கொண்டு படிக்கலாம் என்று இருக்கிறேன் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார் ஷாலினி. இருந்தாலும் சரண் வம்படியாக கதையை பாருங்கள், இந்த கதையில் எந்த ஒரு கிளாமர் இருக்காது என்று எவ்வளவோ எடுத்து பேசியும், ஷாலினி கடைசி வரை வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

இந்த தகவல் நடிகர் அஜித் கவனத்திற்கு சென்றுள்ளது, உடனே பரவால்ல நான் ஷாலினிடம் பேசுகிறேன் என தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் அஜித். நான்தான் உங்களுக்கு உங்களுடன் ஜோடியாக நடிக்கிறேன், உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது என அஜித் கன்வின்ஸ் செய்ய முயற்சித்துள்ளார். எனக்கு ஒரு இரண்டு நாட்கள் டைம் கொடுங்கள் நான் பதில் சொல்கிறேன் என ஷாலினி அஜித்திடம் தெரிவித்துள்ளார்.

இதன் பின்பு இரண்டு நாள் கழித்து அமர்க்களம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார் ஷாலினி. அமர்க்களம் படப்பிடிப்பு தொடங்கியது முதலே ஷாலினியை ஒருதலை பட்சமாக காதலிக்கிறார் நடிகர் அஜித். ஆனால் அந்தக் காதலை சொல்ல முடியாமல் தயங்கி வந்த அஜித், ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் சரனிடம், சார் இந்த படத்தை சீக்கிரம் முடித்து விடுங்கள், நீங்கள் ரொம்ப தாமதம் செய்தால் எங்கே நான் ஷாலினியை காதலித்து விடுவேன் போல என ஷாலினி காதில் விழும்படி பேசியிருக்கிறார் நடிகர் அஜித்.

இது ஒட்டுமொத்த யூனிட்டுமே கேட்டுள்ளனர். அப்போது அஜித் பேசிய அந்த வார்த்தையை கேட்டு ஷாலினியும் வெட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் படப்பிடிப்பு தொடர்ந்து ஷாலினிக்கும் அஜித்துக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரொம்ப வொர்க் அவுட் ஆக தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமர்க்களம் படத்தில் ஷாலினி கையை கத்தியால் அஜித் கிழிப்பது போன்ற ஒரு காட்சி.

ஆனால் அந்த காட்சியில் பயன்படுத்தியது ஒரு டம்மி கத்தி தான் என்றாலும், அது கொஞ்சம் ஃபோர்சாக அஜித் கிடைத்ததால் ஷாலினி கையில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துள்ளது. உடனே அஜித் பட படத்து போயி அங்கே கூச்சலிட்டு அருகில் இருந்த ஹாஸ்பிடலில் இருந்து பல நர்சுகள் வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். ஷாலினிக்கு அங்கே சிகிச்சை அளித்த நர்ஸ் இது சின்ன காயம் தான் என தெரிவித்துள்ளனர்.

அப்போது ஷாலினி தனக்கு சிறிய காயத்திற்கே அஜித் இப்படி படபடத்துப் போயிட்டாரே என அஜித் மீது இருந்த காதல் மேலும் அழுத்தமானது இப்படித்தான் அஜித் ஷாலினியின் காதல் உருவாகியுள்ளது. இதன் பின்பு அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி, அஜித் வீட்டிற்கு அவருக்கு பிடித்த பல பொருட்களை சேகரித்து இயக்குனர் சரண் மூலம் அனுப்பி அஜித் வீட்டின் வாசலில் வைக்க செய்துள்ள ஷாலினி, பின்பு அஜித்க்கு போன் செய்து உங்கள் வீட்டின் கதவை திறந்து பாருங்க என்றதும், அஜித் வீட்டின் மும்பு இருந்த பார்சலை பிரித்து பார்த்து அதில் தனக்கு மிகவும் பிடித்த பைக் பொம்மையும் இருந்துள்ளது. இப்படி அஜித் பிறந்த தினத்தில் விதியசமான முறையில் தன்னுடைய காதலை உறுதி படுத்தியுள்ளார் ஷாலினி.