ஏமாற்றிய அஜித்தை சும்மா விட மாட்டேன்… சபதத்துடன் சம்பவம் செய்ய தயாரான நயன்தாரா..

0
Follow on Google News

நயன்தாரா சிபாரிசில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தின் வாய்ப்பை பெற்றார் விக்னேஷ் சிவன். பல இயக்குனர்கள் அஜித் படத்தை இயக்குவதற்கு போட்டி போட்டு காத்திருக்கும் நிலையில், நயன்தாரா சிபாரிசில் எளிதாக அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் விக்னேஷ் சிவன்.

சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பே அஜித் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் இயக்குவது உறுதி செய்யப்பட்டு, அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமும் மற்றும் அஜித்தும் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை தயார் செய்து படப்பிடிப்புக்கு தயாராக இருக்க விக்னேஷ் சிவனை அறிவுறுத்தியிருந்தார்கள்.

இதனை தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், விக்னேஷ் சிவனை நேரில் அழைத்து படத்தின் முழு கதையை கேட்ட அஜித், இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை என நிராகரித்து விட்டார். ஏற்கனவே படத்தில் கமிட் ஆகும்போதே விக்னேஷ் சிவனிடம் முழு கதையும் கேட்டுவிட்டு கமிட்டான நடிகர் அஜித், ஒரு ஏதோ ஒரு காரணத்திற்காக திட்டமிட்டு விக்னேஷ் சிவனை அந்த படத்திலிருந்து நடிகர் அஜித் வெளியேற்றியேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

இருந்தும் அஜித்தை தொடர்பு கொண்டு அவரை கன்வின்ஸ் செய்து விடலாம் என தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நயன்தாரா. சார் கதையில் எதாவது பிரச்சனை என்றால் வேறு ஒரு கதையை விக்கி தயார் செய்வார், ஒரு படத்தில் கமிட் செய்துவிட்டு சுமார் 8 மாதம் அதற்காக வேலையும் செய்துவிட்டு, திடீரென கதை பிடிக்கவில்லை என ஒரு இயக்குனரை மாற்றினால், அவருடைய சினிமா எதிர்காலம் பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள் என நயன்தாரா எவ்வளவோ அஜித்திடம் கெஞ்சியதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு அஜித், என்னுடைய ரசிகர்களை நான் திருப்திப்படுத்தும் வகையில் கதைகளை தேர்வு செய்ய வேண்டும், அந்த வகையில் இது போன்ற கதைகளில் நான் நடித்தால் என்னுடைய ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் அடைவார்கள் என விக்னேஷ் சிவனை மாற்றுவதில் உறுதியாக இருந்துள்ளார் அஜித்.இதனை தொடர்ந்து அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதில் மகிழ் திருமேனி கமிட்டானார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தை வெறுப்படைய செய்ய வேண்டும் என்பதற்காகவே நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் மிக தீவிரமாக நயன்தாரா இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனம் நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டு வைத்திருந்த நிலையில், தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்திடம் விஜய் தற்போது கமிட்டாகி உள்ள படத்தில் நடிப்பதற்கான விருப்பத்தை நயன்தாரா தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்பு தொடர்ந்து சினிமாவில் சரிவுகளை சந்தித்து வரும் நயன்தாரா தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜயுடன் நடித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க முடிவு செய்துள்ளார்.

மேலும் விஜய் மேனஜர் ஜெகதீஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் நயன்தாரா கமிட்டாகியுள்ளதாக கூறப்டுகிறது, அந்த வகையில் அஜித்துக்கு போட்டியாக இருக்கும் விஜய் உடன் இணைந்து நடிக்க நயன்தாரா தீவிரமாக இருப்பதற்கு காரணம், தன்னுடைய கணவரை கமிட் செய்து கடைசி நேரத்தில் கழட்டி விட்ட அஜித்தை வெறுப்படைய செய்ய வேண்டும் எனப்தற்காக தான் என்கிறது சினிமா வட்டாரங்கள்..