வேண்டவே வேண்டாம் என்றேன்… அஜித்துடன் ஜோடி சேர என்னை கட்டாய படுத்தி நடிக்க வைத்தனர்..நடிகை பகீர் பேட்டி…

0
Follow on Google News

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நடித்த படங்களிலேயே மிகவும் முக்கியமான படம் என்று சொன்னால் அது “காதல் மன்னன்” தான். அது மட்டும் இல்லாமல் தல அஜித் அவர்கள் சினிமா துறையில் இந்த அளவிற்கு புகழ் உச்சத்தில் இருப்பதற்கு முக்கியமான பங்கு என்று சொன்னால் ‘காதல் மன்னன்’ படத்தையும் சொல்லலாம். உண்மையிலேயே இவர் பெயர் திலோத்தமா என்று தான் அதிக பேர் நினைத்து இருக்கிறார்கள். ஆனால்,இவருடைய உண்மையான பெயர் மானு. நடிகை மானு அவர்கள் 1982 ஆம் ஆண்டு அசாமில் உள்ள கவுகாத்தி மாவட்டத்தில் பிறந்தவர்.

இவருக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் உடையவர். அதனால் கதக் ,பரத நாட்டியம் மற்றும் மணிப்பூர் ஆகிய பல கலைகளை கற்று அதில் சிறந்து விளங்கினார்.அதுமட்டும் இல்லாமல் மானு அவர்கள் மேடை நிகழ்ச்சிகளை கூட நிகழ்த்தி உள்ளார். இந்நிலையில் மானு அவர்களுடைய நடனத்தை பார்த்து நகைச்சுவை நடிகர் விவேக் தன்னுடைய நண்பர் இயக்குனர் சரணிடம் மானுவை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்

அதன் பின்னர் தான் மானு அவர்கள் தல அஜித்துடன் காதல் மன்னன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.நடிகை மானு, ஒரு படத்தில் நடித்திருந்தாலும் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பேசப்பட்டு வருகிறார். அந்த அளவிற்கு திலோத்தமா கதாபாத்திரம் இளைஞர்களை கவர்ந்தது. பின்னர் மானு அவர்கள் இந்த படத்திற்கு பின்பு வேறு எந்த படங்களில் நடிக்கவில்லை. நடிகை மானு சினிமா உலகிற்கு வரும் போது வெறும் 16 வயது தான். அதோடு நடிகை மானு காதல் மன்னன் படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

தற்போது இசையமைப்பாளர் கார்த்திக் மலேசியாவில் ‘டும் டும் டும்’ என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களுக்கு இசை அமைத்துள்ளார். டும் டும் டும், காதலா காதலா, உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட படங்களில் இவரது பாடல்கள் இப்போது வரையிலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளது.

இவர் நடத்தவுள்ள இசை நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பாடகர்கள் சிலர் பாட உள்ளனர். மேலும் இசை அமைப்பாளர் இளையராஜா, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நடிகர் சதீஷ் மற்றும் பிரியங்கா, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, நடிகை மானு, நடிகர் சதீஷ், பாடகி பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் நடிகை மானு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நான் எனது சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். இயக்குனர் சரண் மற்றும் நடிகர் விவேக் இருவரும் தான், என்னை நடிக்க அழைத்து வந்தனர்.எனக்கு அப்போது சினிமா குறித்த புரிதல் இல்லாதால், அதன்பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. படிப்பு முக்கியம் என எனக்கு தோன்றியதால் நடிக்க விரும்பவில்லை.

ஆனாலும், எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. நான் இப்போது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் சினிமாவுடன் தொடர்பில் தான் இருக்கிறேன்.இயக்குனர் மோகன் ராஜா நடித்த ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற படத்தில், கடைசியாக நடித்துள்ளேன்” என்றார். அதைத் தொடர்ந்து, நடிகர் அஜித் பற்றிய கேள்விக்கு, “அஜித் மிகவும் நல்ல மனிதர், பண்பாளர். அவருடைய இந்த உயரத்திற்கு காரணம் அவரின் மனிதநேயம் தான். அவர் இன்னும் உயரத்திற்கு போக வேண்டும்” என்று தெரிவித்தார்.