என்னடா இது திரிஷாவுக்கு வந்த வாழ்வு… அஜித்திடமே இப்படியா.?

0
Follow on Google News

ஒரு காலத்தில் டாப் ஒன் நடிகையாக வலம் வந்த நடிகை திரிஷா, தொடர் தோல்வி படங்கள், மறுபக்கம் நயன்தாராவின் தொடர் வெற்றி படங்களால், மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கிய திரிஷா பல முறை சினிமாவில் ரீ – என்ட்ரி கொடுக்க முயற்சித்தும், அது நயன்தார இருக்கும் வரை முடியாத காரணமாக இருந்தது.

நயன்தாரா திருமணத்திற்கு பின்பு இது தான் சரியான தருணம் என பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை த்ரிஷாவுக்கு தற்பொழுது தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, நயன்தாரா இல்லாத தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியுள்ள நடிகை திரிஷா,

இந்த நிலையில் அஜித் – விஜய் இருவருடன் ஒரே நேரத்தில் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஒன் நடிகையாக வலம் வருவதற்கு திட்டமிட்ட திரிஷா. விஜய் சிபாரிசில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார், அதே போன்று இதற்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த அஜித் நடிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு கேட்டு அஜித்தை தொடர்பு கொண்டுள்ளார் திரிஷா.

அப்போது லைக்கா தயாரிப்பதாக இருந்த விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் நடிக்கும் புதிய படத்தில் திரிஷா நடிக்க சிபாரிசு செய்துள்ளார் அஜித், இதற்கு தயாரிப்பு தரப்பு ஓகே செய்துள்ளது, இதனால் திரிஷாவுக்கு நடிப்பது உறுதி என்று செய்திகளும் வெளியானது. ஆனால், ஏற்கனவே திரிஷாவுக்கு எங்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கும், அதனால் திரிஷா வேண்டாம் என விக்னேஷ் சிவன் உறுதியாக இருந்துள்ளார்.

இதன் பின்பு விக்னேஷ் சிவன் இயக்க இருந்த அஜித் நடிக்கும் புதிய படத்தில் த்ரிஷாவுக்கு வாய்ப்பு மறுக்க பட்டு வேறு ஒரு நடிகையை தேர்வு செய்யும் வேலையில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்த ஒரு சூழலில் பல்வேறு காரணங்களால் அஜித் நடிக்கும் புதிய படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு, மகிழ் திருமேனி கமிட்டானார்.

இந்த நிலையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு முழு ஸ்கிரிப்ட் தயார் செய்த பின்பே படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக அஜித் இருந்ததால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மகிழ்ந்திருமேனி முழு ஸ்கிரிப்ட் எழுதும் பணியை தயார் செய்து முடித்துள்ளார். இந்த இடைப்பட்ட கேப்பில் அஜித் ஒரு பைக் டூரும் சென்று வந்துவிட்டார்.

இந்த நிலையில் மகிழ் திருமேனி அஜித் கூட்டணியில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தில் நடிக்க நடிகை திரிஷாவை இடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் திரிஷா சில மாதங்களுக்கு முன்பு அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும் அதன் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொண்டு விடலாம் என முயற்சி செய்து வந்தார்.

ஆனால் தற்பொழுது திரிஷாவின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. தற்போது லியோ படத்தில் நடித்து வரும் திரிஷா, இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, இந்தப் படத்திற்கு பின்பு தன்னுடைய மார்க்கெட் வேற லெவல் உயரும். அந்த வகையில் தன்னுடைய சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்துவதற்கான திட்டத்தில் திரிஷா உள்ளாராம்.

அதன்படி தற்பொழுது தன்னை கமிட் செய்ய வருமாறும் வரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களிடம் சம்பளத்தை பல மடங்கு அதிகரித்து கேட்டு வருகிறாராம். இந்த நிலையில் ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் திரிஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய அதே சம்பளத்தில் தற்பொழுது மகிழ் திருமணி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் திரிஷா நடிப்பதற்கு பேசப்பட்டுள்ளது.

ஆனால் திரிஷா தற்பொழுது தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதால் இந்த படத்தில் திரிஷாவை கமிட் செய்வதற்கு தயக்கம் காட்டி வருகிறது படக்குழு, அந்த வகையில் இதற்கு முன்பு அஜித்துடன் நடித்தால் போதும் என எதிர்பார்த்து வாய்ப்புக்காக காத்திருந்த திரிஷா தற்பொழுது அஜித் உடன் நடிப்பதற்காக சம்பளத்தில் கடும் கெடுபிடி காட்டி வருவதாக கூறப்படுகிறது.