முரளிதரன் சொன்ன உடனே வழிமொழிந்து விஜய் சேதுபதி செய்வது சரி கிடையாது.! திருமாவளவன் கடும் எச்சரிக்கை.!

0
Follow on Google News

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதற்க்கு தமிழக்தில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்‌ மீதுள்ள தவறான புரிதலால்‌ ‘800’ படத்திலிருந்து விலக வேண்டும்‌ என நடிகர்‌ விஜய்‌ சேதுபதிக்கு சிலர்‌ தரப்பில்‌ இருந்து கடுமையான அழுத்தம்‌ தருவதை நான்‌ அறிகிறேன்‌. எனவே என்னால்‌ தமிழ்‌நாட்டின்‌ ஒரு தலைசிறந்த கலைஞன்‌ பாதிப்படைவதை நான்‌ விரும்பவில்லை.

அது மட்டுமல்லாது விஜய்‌ சேதுபதியின்‌ கலைப் பயணத்தில்‌ வருங்காலங்களில்‌ தேவையற்ற தடைகள்‌ எற்பட்டுவிடக்கூடாது என்பதையும்‌ கருத்தில்‌ கொண்டு இத்திரைப்படத்தில்‌ இருந்து விலகிக்‌ கொள்ளுமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறேன்‌, ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும்‌ தடைகளால்‌ ஒருபோதும்‌ நான்‌ சோர்ந்து விடவில்லை. அதை அனைத்தையும்‌ எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால்‌ எட்ட முடிந்தது. இத்திரைப்படம்‌ எதிர்காலத் தலைமுறையினருக்கும்‌ இளம்‌ கிரிக்கெட்‌ வீரர்களுக்கும்‌ ஒரு உத்வேகத்தையும்‌ மன உறுதியையும்‌ அளிக்கும்‌ என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்கச் சம்மதித்தேன்‌. அதற்கும்‌ இப்போது தடைகள்‌ ஏற்பட்டுள்ளன .

நிச்சயமாக இந்தத் தடைகளையும்‌ கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில்‌ கொண்டு சேர்ப்பார்கள்‌ என நம்புகிறேன்‌. இதற்கான அறிவிப்பு விரைவில்‌ வரும்‌ என தயாரிப்பு நிறுவனம்‌ என்னிடம்‌ உறுதி அளித்துள்ள நிலையில்‌, அவர்கள்‌ எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளுக்கும்‌ உறுதுணையாக இருப்பேன்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ இத்தகைய சூழ்நிலையில்‌ எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும்,‌ அரசியல்‌ பிரமுகர்களுக்கும்,‌ தமிழ்‌த் திரைப்படக் கலைஞர்களுக்கும்,‌ விஜய்‌ சேதுபதியின்‌ ரசிகர்களுக்கும்,‌ பொதுமக்களுக்கும்‌ குறிப்பாக தமிழக மக்களுக்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌”. என முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையை தனது டிவீட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி வெளியிட்டு நன்றி வணக்கம் என தெரிவித்துள்ளார். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விஜய் சேதுபதியை கடுமையாக எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதாவது,இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் விஜய்சேதுபதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஆறுதல் தான் என்றாலும் முரளிதரன் கோரிக்கையை ஏற்று அவர் விலகி உள்ளாரே தவிர மக்களின் உணர்வுகளை மதிக்க வில்லை என்று கூறியுள்ளார் மேலும் இது திருமாவளவன் குமுறல் மட்டும் கிடையாது. தமிழகத்தில் உள்ள பலரும் இதே மனக்குமுறலை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள் மட்டும் கிடையாது, திரையுலகத்தில் விஜய் சேதுபதியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற இயக்குனர் சீனு ராமசாமி, இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தமிழ்த் திரையுலகத்தின் ஜாம்பவான்கள் கோரிக்கை விடுத்தும் அதுபற்றி பதில் சொல்லாமல், சலனம் காட்டாத, விஜய் சேதுபதி, முரளிதரன் ஒரு அறிக்கை விட்டதும் வழிமொழிந்து ட்விட் செய்துள்ளார். இது கொஞ்சமும் சரி கிடையாது என்று விஜய் சேதுபதியை திருமாவளவன் கடுமையாக எச்சரித்துள்ளார்.