பேச்சோடு இல்லாமல் களத்தில் இறங்கிய பாஜக… சுந்தரவல்லியை கைது செய்யப்போவது கர்நாடக போலீசா.? புதுச்சேரி போலீசா.?

0
Follow on Google News

தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் திமுக ஆட்சியில் கைது செய்து வருவது குறித்து சமீபத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இந்தியாவில் எங்கேவாது டுவிட்டரில் பதிவு போட்டதற்காக குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது என கூறமுடியுமா.? அதனால் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு லெவல் தான். இந்தியாவில் எல்லா பக்கமும் சிஆர்பிசி இருக்கு.

தமிழ்நாட்டில் யாராவது தவறான பதிவு செய்தால் கூட பிற மாநிலத்தில் எப் ஐ ஆர் பதிவு செய்ய முடியும், அந்த மாநிலத்தில் உள்ளவர்களை காவல்துறையினர் கைது செய்யவும் முடியும். எல்லாதுக்கும் ஒரு எல்லை தான்,அதனால் இதையும் தமிழக காவல்துறையும் தமிழகத்தில் ஆளுகின்ற திமுக அரசும் புரிந்துகொள்ள வேண்டும். 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கின்றோம், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, பொறுமையாக இருக்க கூடிய ஒரு கட்சியை அந்தப் பொறுமையின் எல்லையை கடக்க வைத்து விடாதீர்கள் இதுதான் நான் தமிழக அரசுக்கு எச்சரிக்கை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் இந்த பேட்டிக்கு பின்பு, பேச்சோடு இல்லாமல் களத்தில் இறங்கியது பாஜக, பிரபல திமுக ஆதரவாளர் சுந்தரவல்லி பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அதில், சுந்தரவள்ளி பேசியதாவது, “இந்திய ராணுவ வீரர்கள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள், ராணுவ வீரர்களின் பிணத்தை வைத்து தன்னை சிறப்படுத்திக் கொள்கிறார் இந்திய பிரதமர் மோடி,

எதாவது பிரச்சனை இந்திய பிரதமர் மோடிக்கு வருதுன்னா உடனே ராணுவ வீரர்களை கொல்லனும் . 2500 ராணுவ வீரர்களை ஆடு மாடுகளை போல் வண்டியிலே ஏற்றி வரிசையாக போனார்கள், மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை மானத்தோடு அனுப்பினார் என்று எதிரி நட்டு பிரதமரை புகழ்ந்து பேசியும், இந்திய பிரதமர் மோடி ராணுவவீரர்கள் 40 பேரை கொன்று விட்டார் என சுந்தரவல்லி பேசிய வீடியோ ஓன்று வைரலாகி வருகிரியாது .

இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு புதுச்சேரி பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஏற்பாட்டில் சுந்தரவல்லி மீது வழக்கு பதிவு செய்ய ஏற்பாடு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது, அதே போன்று கர்நாடகாவில் உள்ள பாஜக சார்பிலும் சுந்தரவல்லி மீது வழக்கு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், விரைவில் சுந்தரவல்லி கைது செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் ஆனால் கைது செய்யப்போவது கர்நாடக போலீசா.? அல்லது புதுச்சேரி போலீசா என்பது கைது செய்யும் போது தான் தெரியவரும் என கூறபடுகிறது.

டேய்…தம்பி சூர்யா ..இனி உன் படம் தியேட்டரில் ஓடாது… புரட்சி பேசும் நடிகர்கள்… மீடியா… பேடிகள் எங்கே.?