ரஜினியை வைத்து பணம் சம்பாரிப்பது எப்படி..! இரண்டு மகள்களுக்கு இடையில் கடும் போட்டி…பாவம் அப்பாவி ரசிகர்கள்…

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து எப்படியெல்லாம் பணம் சம்பாரிக்கலாம் என அவரது இரண்டு மகள்களுக்கு இடையில் கடும் போட்டி நடைபெற்று வருவதாக கூறபடுகிறது. நடிகர் ரஜினிகாந்த் 2010ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்திற்கு பின்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உடல்நலம் பெற்று திரும்பி வந்தார், இதன் பின்பு சில காலம் ஓய்வில் இருந்தவர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா படத்தின் சம்பள தொகையை இரண்டு மகள்களும் பிரித்து கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்து தனது தந்தை ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படத்தின் வரும் சம்பள தொகை ஒரு படத்தின் சம்பளம் ஒரு மக்களுக்கும் அடுத்த படத்தின் சம்பளம் மற்றொரு மக்களுக்கும் என பேசி முடிவு செய்யப்பட்டு, ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி படத்தின் சம்பள தொகை இளைய மகள் சௌதர்யாவுக்கு சென்றது.

அடுத்து காலா படத்தை மூத்த மகள் ஐஸ்வர்யா கணவர் நடிகர் தனுஷ் சொந்த தயாரிப்பில் எடுக்கப்பட்டு மொத்த படத்தின் லாபத்தை எடுத்து கொண்டனர், இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு சம்பளம் கிடையாது என கூறபடுகிறது. இதன் படி அடுத்தடுத்து ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் சம்பள தொகையை இரண்டு மகள்கள் எடுத்து வந்த நிலையில், இடையில் ரஜினி குடியிருக்கும் போயஸ் கார்டன் வீடு யாருக்கு என ரஜினியின் இரண்டு மகள்களுக்கு இடையில் பிரச்சனை வெடித்துள்ளது.

இதனை தொடர்ந்து இளைய மகள் சௌதர்யாவுக்கு தான் போயஸ் கார்டன் வீடு என முடிவான போது, மூத்த மகள் ஐஸ்வர்யா அதர்க்கு ஒப்பு கொள்ளவில்லை, இதனையடுத்து தற்போது இருக்கும் வீட்டின் அருகில் போயஸ் கார்டனில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு புதிய வீடு ஓன்று கட்டி கொடுக்கப்படும் என்றும், பழைய வீடு இரண்டாவது மகள் சௌந்தர்யா எடுத்து கொள்ளட்டும் என முடிவு செய்த பின் பிரச்சனை முடிவுக்கு வந்தது, இதனை தொடர்ந்து மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு புதிய வீடு கட்டும் பணி தொடக்கியது.

இப்படி ரஜினி இதுவரை சம்பாரித்து வைத்திருக்கும் பல கோடி சொத்துக்கள் இருந்தும். இன்னும் ரஜினியை வைத்து எப்படியெல்லாம் பணம் சம்பாரிக்கலாம் என இரண்டு மகள்களுக்கு இடையே கடும் போட்டி நடந்து வரும் நிலையில், இரண்டாவது மகள் சௌந்தர்யா புதியதாக ஹூட் செயலி ஒன்றை அறிமுகம் செய்து அந்த செயலியை தனது தந்தை ரஜினிகாந்த் டிவீட்டர் பக்கத்தின் மூலம் விளம்பரம் செய்து வருகிறார் ஆனால் இது மக்கள் மத்தியில் தோல்வியை பெற்றுள்ளது.

இந்நிலையில் சும்மா இருந்த தனது ரசிகர்களை அரசியலுக்கு வருகிறேன் என உசுப்பேத்தி விட்டு ஏமாற்றம் அடைய செய்து விட்டு தற்போது, அவரது மகள்கள் தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து எப்படியெல்லாம் பணம் சேர்ப்பது என கடும் போட்டி போட்டு கொண்டிருக்கையில், இதையெல்லாம் புரிந்து கொள்வார்களா.? ரஜினிகாந்த் அவர்களின் அப்பாவி ரசிகர்கள் என ரஜினி வீட்டில் நடக்கும் சம்பவங்களை அறிந்தவர்கள் சினிமா வட்டாரத்தில் பேசி வருவது குறிப்பிடதக்கது.

டேய்…தம்பி சூர்யா ..இனி உன் படம் தியேட்டரில் ஓடாது… புரட்சி பேசும் நடிகர்கள்… மீடியா… பேடிகள் எங்கே.?