ஸ்டாலினிடம் எதிர்பார்க்க முடியாது, துர்கா ஸ்டாலின் இதை செய்வாரா.? உதயநிதி தரம் தாழ்ந்த பேச்சுக்கு வானதி ஸ்ரீநிவாசன் கண்டனம்.!

0
Follow on Google News

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் பேச்சுகள் தொடர்ந்து விமர்சனம் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது, அநாகரிகமாக அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்வது பின் அவர்கள் அதே பாணியில் பதிலடி கொடுத்தால் அமைதியாகி விடுவது என உதயநிதியின் தரம் தாழ்ந்த பேச்சுக்கள் தொடர்கிறது, அமைச்சர் ஜெயக்குமாரை பிளே பாய் என உதயநிதி விமர்சனம் செய்ததற்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார், உதயநிதி தான் பிலே பாய், அவர் அப்பா ஸ்டாலின் பிலே பாய், அவர் தாத்தா கருணாநிதி பிளே பாய் என பதிலடி கொடுத்த பின்னர் நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை எனப் பின்வாங்கினார் உதயநிதி.

இதே போன்று சமீபத்தில் உதயநிதி, முதல்வர் பழனிசாமியை விமர்சனம் என்கிற பெயரில் சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றதைப் பற்றி மிக கீழ்த்தரமாக தரம் தாழ்ந்து பேசியிருந்தார், அவர் பேசிய வார்த்தைகள் பெண்களை இழிவு செய்வது போன்று அமைந்துள்ளதால் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர், தொடர்ந்து உதயநிதி இது போன்று பேசி வருவது தமிழக அரசியலில் திமுகவின் செல்வாக்கும் சரிவை நோக்கி சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீநிவாசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார், அவர் இது குறித்து கூறுகையில், அன்று தாத்தா டி.என்.அனந்த நாயகியிலிருந்து ஆரம்பித்து வைத்ததை, பேரன் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கொண்டுள்ளார். திமுகவில் சிந்திக்கின்ற பாரம்பர்யமே பெண்களை கேவலப்படுத்துவதாகவே உள்ளது.

தலைவர்களே இதை முன்னெடுக்கும் போது, தொண்டர்கள் பூங்கோதையை அவமானப்படுத்துவதில் துவங்கி சக பெண் நிர்வாகிகளின் இடுப்பை கிள்ளுவது வரை சாதாரணமாக கடந்து போகிறார்கள். எதிர்வினையாக ராசாத்தி அம்மா துவங்கி கனிமொழி, கிருத்திகா வரை பெண்களே இலக்காகிறார்கள். பெண்களை அரசியலுக்கு வரவிடாமல் இம்மாதிரி விமர்சனங்கள் வாயிலாக இரும்பு அரணை எழுப்புகிறார்கள். தன் அம்மா வயதிலிருக்கும் சசிகலாவை உதயநிதி விமர்சனம் செய்கின்ற விதம் அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கப்படவேண்டியது. இதை திமுக தலைவர் ஸ்டாலினிடம் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது, திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களே! செய்வீர்களா? என தனது கண்டனத்தை வானதி ஸ்ரீநிவாசன் பதிவு செய்துள்ளார்.