அந்நிய சக்திகள் ஆட்டம், சீரழிந்த தேசம் , ஊழல்கள், குண்டுவெடிப்புகள் என இந்தியா நிலைகுலைந்து கலங்கியிருந்தது போது அவதரித்த நரேந்திர மோடியின் சாதனை வரலாற்று பிறந்தநாள் சிறப்பு கட்டுரை.

0
Follow on Google News

இந்திய பெருநாட்டுக்கு தனிபெரும் தலைவன் வந்துவிடவே கூடாது என்பது சில அந்நியசக்திகளின் பெருங்கனவு, அப்படி வந்துவிட்டால் அவன் தலமையில் தேசம் சீறிஎழும்பொழுது தங்களின் மேலான்மைக்கு ஆபத்து என கணக்கிட்டார்கள், இது பலநூறு ஆண்டுக்கு முன் ஆப்கானியரால் இடபட்ட கணக்கு, அது 17ம் நூற்றாண்டில் இருந்து 2014 வரை நீடித்த சதி, ஆப்கானிய காலத்து பிரித்வி ராஜன் முதல் வெள்ளையன் காலத்து புலித்தேவன், நேதாஜி வரை மிக கவனமாக அந்த சதி அரங்கேறிற்று.

சுதந்திர இந்தியாவில் நேரு பலவீனமான தலைவர்தான், ஆனால் 1962 வரை அவருக்கு ஒரு மக்கள் அபிமானம் இருந்தது, சீனபோரில் அது கலைய நேரு வீழ்ந்தார். இந்தியாவின் வலுவான தலைவராக எழும்பியவர் லால் பகதூர் சாஸ்திரி, ஆனால் மிக குறுகிய காலத்திலே அவரும் வீழ்த்தபட்டார், இந்தியாவின் வலுவான தலைவரான இந்திராவும் கூட்டு சதியில் கொல்லபட்டார், அவரின் வாரிசுகளும் தனிபெரும் தலைவர்களாக கூடாதென பிடுங்கி எறியபட்டனர். 1984க்கு பின்னரான காலங்கள் இந்தியாவின் குழப்பமான காலங்கள், தனிபெரும் தலைவர் இல்லாமல் தேசம் அலோங்கலபட்ட காலங்கள்

பத்து எம்.பி வைத்திருக்கும் துக்காடா கட்சிக்கெல்லாம் இத்தேசத்தை ஆளலாம் எனும் கனவு வந்தது அப்பொழுதுதான், தேசம் சீரழிந்தது, வெளிநாட்டு கொள்கை முதல் உள்நாட்டு கொள்கை வரை தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் சுயநல கூட்டணி இம்சைகள் நாட்டை இஷ்டத்துக்கு வளைத்தன‌. நாடெல்லாம் ஊழல்கள், ஊரெல்லாம் குண்டுவெடிப்புகள் என இந்தியா நிலைகுலைந்து கலங்கியிருந்தது. அந்நிய சக்திகள் ஏகபோகமாக தலையினை விரித்து போட்டு இங்கு ஆடிகொண்டிருந்தன‌.

இனி இந்தியாவில் மாநில கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் நடக்கும், அது வளர்ந்து தேசம் உடையும் என கணித்து கொண்டிருந்தன உலக நாடுகள், அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது, தேசம் குஜராத்தின் முதலமைச்சராக பலமுறை இருந்த மோடியிடம் ஆட்சியினை கொடுத்தது. ஆம், தேசம் தன் கடைசி நம்பிக்கையாய் அந்த மனிதனை நம்பி ஆட்சியினை கொடுத்தது, அதுவரை குஜராதின் வெற்றிபெற்ற முதல்வராகவும் ஆனால் காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளால் “மரண வியாபாரி” என உலகமெல்லாம் தாலிபன் போல ஒரு பிம்பம் உருவாக்கபட்டவராகவும் அவர் இருந்தார் ஆனால் தேசமக்கள் காங்கிரஸின் பொய்பிம்பத்தை நம்பவில்லை, தேசம் மோடியினை நம்பியது.

அதற்கு காரணமும் இருந்தது, மோடி ஒன்றும் சும்மா ஊர்சுற்றிவிட்டு சட்டென பிரதமர் நாற்காலிக்கு வரவில்லை, அவர் 10 வயதில் இருந்தே நாட்டுக்காய் உழைக்க வந்தார், அந்த அர்பணிப்புத்தான் அவரை குஜராத் முதல்வராகிற்றும் அந்த ஆர்வம்தான் அவரை நிரந்தர முதல்வராகவும் வைத்திருந்தது. பின் பிரதமராக அவர் அமர்ந்தபொழுது அவருக்கு முன் ஏகபட்ட சவால்கள் இருந்தன, அவர் ஆட்சிக்கு மிகபெரும் அவபெயர் உண்டாக்கி, அந்த பெரும்பான்மையினையே செல்லா காசாக்க பெரும் திட்டமெல்லாம் இருந்தது.

உலகமும் முதலில் அவரை அச்சத்துடனே நோக்கியது., தாலிபன்களின் ஆட்சிபோல் இந்தியாவிலும் வந்தாயிற்று, மோடி கொலைகாரர், மோடி பயங்கரவாதி என்றெல்லாம் அச்சமூட்டுதல் நிகழ்ந்தன‌ குஜராத் கலவரங்களை காரணம் காட்டி அப்படி பெரும் கட்டுகதைகள் பரவின. நிச்சயம் குஜராத் கலவரங்களை அவர் தொடங்கவில்லை, ஆனால் ரயிலை யார் எரித்தார்கள் என்பதெல்லாம் இந்தியாவில் விடையற்ற கேள்விகள்.

மோடி கலவரத்தை அடக்கினார் அவரின் நடவடிக்கையில் இந்துமக்களும் கொல்லபட்டனர், ஏராளம் கொல்லபட்டனர் எனினும் மோடிக்கு எதிரான சக்திகள் பிம்பத்தை மாற்றி வைத்திருந்தன‌ இன்றைய தாலிபன்களை போல கடுமையான பிம்பத்துடனேதான் இந்திய பிரதமரானார் மோடி, உலகம் அவரை அச்சத்தோடு பார்த்தன, வளைகுடா நாடுகள் ஒருமாதிரி கண்களை உருட்டின, பாகிஸ்தான் தொடை தட்டியது, இவர்களோடு காங்கிரசும் சேர்ந்து நீலிகண்ணீர் வடித்தது.

மோடியின் 2014ல் தொடங்கிய முதல் இன்னிங்க்ஸில் ஒவ்வொரு நாடாக சென்று தன் இந்திய கனவினை விளக்கி சொல்வதிலே பெரும்பாலும் இருந்தது. “நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல, மத வெறியர்களும் அல்ல‌. எமக்கு தேவை வலுவான‌ இந்தியா, எந்த மதத்தையும் நாட்டையும் கலாச்சாரத்தையும் காக்க போராடினோமோ அதை பாதுகாப்பதே எம் கடமை அன்றி வேறல்ல‌, இந்தியாவில் இந்து ஆட்சி என அச்சபட ஏதுமில்லை. நாம் இந்துநாடுதான் ஆனால் உலகின் ஒரே ஒரு இந்து நாடாக இது இருப்பதில் உலகுக்கு என்ன ஆட்சேபனை? எம்மால் இந்த உலகில் எந்த நாட்டுக்காவது ஆபத்து என ஒரு வரி காட்ட முடியுமா?

உலகெல்லாம் இந்துக்கள் உண்டு, உலகெல்லாம் அம்மதம் உண்டு. ஆனால் சாத்வீக வழியன்றி மகா அமைதியான வாழ்வன்றி ஒரு சிக்கலை காட்ட முடியுமா? இவ்வுலகில் எல்லா மதமும் வாழட்டும் அதில் இந்துமதமும் வாழட்டும். எமக்கு தேவை இந்தியரின் நல்வாழ்வு, அமைதியான பெருவாழ்வு, உலகோடு ஓட்டி அதை கொடுக்க நாம் தயார். உங்களால் எம் தேசம் வாழட்டும், எம்மால் உலக அமைதிக்கும் உங்கள் நலனுக்கும் எக்காலமும் நாமும் செய்வோம். உலகம் வாழட்டும் அதில் இந்தியாவும் வாழட்டும்”

ஆம், மோடியின் அணுகுமுறை அப்படி இருந்தது. ஆர்.எஸ்.எஸ் என்பது ஆபத்தான இயக்கமென்றும் பாஜக என்பது மதவெறி கட்சி என்றிருந்த காலத்தில் அவர் அதை களையபட்ட சிரமம் கொஞ்சமல்ல‌, அந்த மகன் ஒவ்வொரு நாட்டின் படியாக ஏறி இறங்கினார், நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல அதேநேரம் இந்திய நலன்களை விட்டுகொடுப்பவரும் அல்ல என ஒவ்வொரு நாடாக நேரில் போய் சொன்னார். அது நாட்டுக்கு பலனளித்தது, கூர்ந்து கவனித்த நாடுகள் மோடி ஆட்சியில் கவலரமோ குண்டுவெடிப்போ இல்லை இதர மத துவேஷங்களோ இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு அவருக்கு நட்புகரம் நீட்டின‌.

மெல்ல மெல்ல ஒவ்வொரு காரியமாக செய்ய தொடங்கினார் முதல் காரியமாக அவர் மூன்று அடிதளங்களை இட்டார், வெளிநாட்டில் இருந்து வரும் அச்சுறுத்தல் உள்நாட்டில் இருக்கும் குழப்ப வாதிகள், பொருளாதாரத்தை அரிக்கும் முதலைகள், இந்த மூன்று முக்கிய கொள்கைகளில் கவனம் செலுத்தினார், முதல் சில வருடங்கள் இதை அமைதியாக செய்தார், பின் என்ன செய்யவேண்டும் யாரை வைத்து செய்யவேண்டும் என திட்டமிட்டார்

மோடியின் மிகபெரும் வெற்றி என்பது மிக சரியான ஆட்களை கண்டறிந்து அவர்களுக்கு பொறுப்பினை கொடுப்பது, அதை செய்தார். ஜெய்சங்கர், அஜித்தோவால், நிர்மலா சீத்தாராமன், சுஷ்மா, மனோஜ் பரிகார் என அவரின் அமைச்சரவையில் அனைவருமே தேசமாணிக்கங்கள். ஒவ்வொரு திட்டமும் செயல்பட ஆரம்பித்தன, அவரின் அதிரடிகள் மெல்ல தொடங்கின. ஓசையின்றி அந்த சீர்திருத்தம் மெல்ல தொடங்கிற்று, பின் விஸ்வரூபமெடுத்தது

முதலில் உலக அரங்கில் இந்தியாவுக்கு நற்பெயர் ஏற்பட்டது, அந்நாடுகள் இந்தியாவின் நலனுக்கு துணை நின்றன பல உதவிகள் கிடைக்க தொடங்கின‌ இரண்டாவது இந்திய உள்நாட்டு குழப்பவாதிகள் அடக்கபட்டனர், தொண்டு நிறுவணம் எனும் பெயரில் வந்த பணம் நிறுத்தபட்டது, நீண்டகாலமாக விசாவோடு இல்லை விசா இல்லாமல் சத்திரத்தில் தங்கியது போல் தங்கியிருந்த அந்நியர் விரட்டபட்டனர், இதனால் தேவையில்லா போராட்டம் குறைந்தது.

கருப்பு பண ஒழிப்பு என அவர் செய்த நடவடிக்கையே இங்கு வங்கிககளை தொழிலதிபர்கள் செல்லரித்தது போல் அரித்து கொண்டிருந்ததை காட்டின, அதை சரிசெய்யும் பொழுதுதான் மாய தொழிலதிபர்களின் போலி பிம்பங்கள் உடைந்தன, யாரெல்லாமோ அலறி அடித்து ஓடினார்கள் ஆம், எந்த ஆட்சி என்றாலும் எங்களை அசைக்க முடியாது என சொல்லி கொண்டிருந்தோரெல்லாம் அலறி அடித்து ஓடினர், வங்கிகளுக்கு வரவேண்டிய பணம் வந்தது

பழைய ஆட்சியில் பலமோசடிகளை செய்தவர்களெல்லாம் எங்கோ ஓடி ஓளிந்தனர், அவர்கள் சொத்து வங்கிக்கு வந்தது, மோடி அம்பானி ஆதரவாளரெல்லாம் அல்ல, முகேஷ் அம்பானி கூட திவால் நிலைக்கு வந்திருந்தார், பாரபட்சம் என்பதெல்லாம் மோடியிடம் இல்லை. மோடியின் அதிரடி அவரின் முதல் ஆட்சியின் கடைசி காலத்தில் தொடங்கியது, பாகிஸ்தானுக்குள் யுத்த காலம் அல்லாமல் புகுந்து அடித்த முதல் பிரதமர் அவர்தான். அதில் அலறிய பாகிஸ்தான் அதன் பின் தன் வீரியத்தை குறைத்தது

மோடியின் மிகபெரிய சாதனை நடக்கவே நடக்காது என உலகம் நம்பியிருந்த, எந்த பிரதமராலும் தீர்க்க முடியா காஷ்மீர் சிக்கலை தீர்த்தது. அது வரலாற்று அதிசயம், இந்திய சுதந்திரம் போல அது மிகபெரும் வரலாற்று நிகழ்வு. காஷ்மீரில் கைவைத்தால் விஷயம் பாகிஸ்தானோடு அல்ல, சீனாவோடு மோதவேண்டி வரும் என்பதாலே எல்லா பிரதமரும் தயங்கினார்கள். மோடி அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டுத்தான் காரியத்தை செய்தார்.

காஷ்மீரை சேர்த்து கலவரங்களை அடக்கி பின் லடாக்கில் கவனம் செலுத்தி அதிலும் பல பகுதிகளை இன்று மீட்டு சீனாவினை முதல் ஆசிய நாடாக அடக்கி வைத்திருக்கின்றது இந்தியா. 1962க்கு பின் சீனா ஒரு நாட்டிடம் மோதிவிட்டு பின்வாங்கியது இந்தியாவிடமே. நேரு பெற்ற தோல்வியினை மிக சரியாக திருப்பி கொடுத்தார் மோடி, கடந்த வருடம் ஜூலைமாதம் நடந்தது சீனாவுடனான சிறிய போர் அதில் சீனா திருப்பி அனுப்பட்டதுதான் நிஜம்.

சீன எல்லைக்கே சென்று இது எங்கள் மண் என சீறிநின்ற மோடி உலகின் மிக தைரியமிக்க தலைவர்களில் ஒருவராக நின்றதை உலகம் குறித்து கொண்டது, மகாபலிபுரத்தில் சமாதானத்துக்கும் தயார், அதே நேரம் லடாக்கில் யுத்தத்துக்கும் தயார் என சீனாவினை அணுகிய மோடி வரலாற்று ராஜதந்திரி, மோடியின் ஆகபட்ச சாதனை என ராமர்கோவிலை தயக்கமின்றி சொல்லலாம், கிட்டதட்ட 500 ஆண்டுகால சிக்கல் அது. எத்தனையோ மன்னர்களும் சர்வாதிகாரிகளும் சுதந்திர இந்திய பிரதமர்களும் செய்ய முடியா சாதனையினை அவர் செய்தார்

காலம் அவருக்கான வாய்ப்பினை கொடுத்தது, அந்த வாய்ப்பையும் பலாத்காரமாகவோ, கலவரத்திலோ அவர் செய்யவில்லை முழு அமைதியுடன், மிக மிக பாதுகாப்பான தேச சூழலில் அதை செய்தார், அது மிகபெரும் அதிசயம், ராமர் கோவிலுக்கான அடிக்கல் அமைக்கும் பொழுது அந்த மோடி சாட்சாத் விஸ்வாமித்திர முனி போல் நின்ற அந்த தோற்றம் மறக்க முடியாத தருணம். அவர் அந்த மண்ணில் விழுந்து வணங்கிய அத்தருணம் விவேகானந்தரின் நினைவும் வந்தது

ராமர்கோவிலை தொட்டால் அரேபியா பொங்கும், ஐரோப்பா அலறும் எனும் பூச்சாண்டிகளை பொய்யாக்கி இன்று அரபு நாடுகளிலே இந்து ஆலயம் எழ வழிசெய்ததுதான் மோடியின் மிகசிறந்த சாதனை, குடியுரிமை சட்டம் முதல், கொடுத்த பணம் மக்களுக்கு ஒழுங்காக செல்கின்றதா என்பது வரை அவரின் ஒவ்வொரு கண்காணிப்பும் மிக மிக அருமையான அணுகுமுறை, தேசத்திற்கான நன்முயற்சிகள். புதிய பொருளாதார கொள்கை, வேலை வாய்ப்பு கொள்கை, புதிய கல்வி கொள்கை என வருங்கால பாரதத்துக்கு, மாணவ சமுதாய மேன்மைக்கு மிகபெரும் அடிதளமிடுகின்றார் மோடி.

விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு தோதான சட்டம் மிக அவசியமான ஒன்று ஒவ்வொரு நாடும் தன் குடிகளை காத்து பராமரிக்க கள்ளகுடியேறிகளை அடையாளம் காண்பது அவசியம், களை பறிக்கா பயிர் செழிக்காது. அதுவும் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள இந்தியாவில் அது மகா அவசியம், அதில்தான் அந்த குடியுரிமை சட்டத்தை திருத்தினார். மோடி இஸ்லாமியருக்கு எதிரானவர் என்பதெல்லாம் ஏற்றுகொள்ள முடியாதது, அவரின் 8 ஆண்டு ஆட்சியில் எந்த இஸ்லாமியனும் பாதிக்கபடவில்லை, அவர்களின் வழிபாட்டுக்கோ மதத்துக்கோ அச்சுறுத்தல் இல்லை.

ஏன் இஸ்லாமிய பெண்கள் கூட பாதுகாப்பினை முத்தலாக் சீர்த்திருத்த சட்டம் மூலம் பெற்றிருக்கின்றார்கள், மோடியின் ஆகசிறந்த சாதனை பொருளாதாரம், ராணுவம், காஷ்மீர், பாதுகாப்பு, லடாக், ராமர்கோவில், தமிழில் பேசிய முதல் பிரதமர், பாரதியினை வள்ளுவனை கொண்டாடிய சோழர்களை கொண்டாடிய முதல் பிரதமர் என ஏகபட்டது இருந்தாலும் அவரின் வரலாற்றில் அல்ல இந்திய வரலாற்றிலே மகா முக்கியமான சாதனை அவர் கொரோனா காலத்தை கையாண்டது.

வரும்முன் தன் மக்களை காக்க தயாராக இருந்தவர் மோடி, கொரோனா எனும் அந்த கோவிட் கிருமி 2019 நவம்பரிலே சீனாவில் லேசாக அறியபட்டபொழுது உலக நாடுகள் அதிர்ந்தன, அதன் வீரியம் அப்படி, இதனால் ரகசியமாக தங்கள் எல்லைகளில் கண்காணிப்பினை அதிகபடுத்துதல் ஒரு பக்கம் மருந்து ஆய்வு என மக்களை அச்சுறுத்தாமல் பரபரபாக ரகசியமாக இயங்கின‌, மோடி இதில் மின்னல்வேகத்தில் செயல்பட்டார், பொருளாதாரம் பாதுகாப்பு கொரோனா மருந்து ஆய்வு என மூன்று விஷயங்களில் செயல்பட்டார்

கொரோனா முடக்கத்துக்கு எந்த நாடும் தப்பவில்லை தப்பவும் முடியாது, அதில் இந்தியாவும் முடங்கினாலும் மோடி அரசு இந்திய பொருளாதாரம் முடங்காமல் காத்தது, இன்றுவரை அது அசையாமல் நிற்பது ஆச்சரியம், மோடியின் ஆகசிறந்த சாதனை கொடும் கொரோனாவுக்கு மருத்துவ விஞ்ஞானத்தில் பின் தங்கிய தேசம் என கருதபட்ட இந்தியா மருந்து கண்டறிந்து அசத்தியது, உண்மையில் அதில் பெரும் ஆபத்து இருந்தது, கொரோனாவுக்கு மருந்தென இம்மாபெரும் தேசம் வெளிநாட்டில் கையேந்தினால் பெரும் பணம் செல்லும்.

அத்தோடு பொதுமுடக்க காலத்தில் இந்திய பொருளாதாரமே நாசமாகி ஏன் தேசமே மாபெரும் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கும், ஆம், தேசம் கண்ட ஆபத்துக்களில் கண்ணுக்கு தெரியா மிக பெரிய ஆபத்து கொரோனா காலமே, ஆனால் மோடி அசத்தினார் சொந்த மருந்தை கன்டறிந்த இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து தன்னை நிறுத்தி கொண்டது, இந்தியா வல்லரசானதை உலக நாடுகள் அமைதியாக ஒப்புகொண்டன‌.

உலகின் எத்தனையோ நாடுகள் இந்தியாவால் மருந்தும் உதவியும் பெற்றன, இந்தியாவின் ஆதிக்கம் பெருகிற்று, 2021ல் இரண்டாம் அலை தாக்கியபொழுது இரு மாதங்களில் இந்திய ஜனத்தொகையில் 3ல் ஒரு பங்கு அழியுமென மிரட்டல்கள் வந்தபொழுது மோடியின் செல்வாக்கில் உலகெல்லாம் இருந்து உதவிகள் குவிய சில நாட்களிலே நிலமையினை கட்டுக்குள் கொண்டுவந்தார் மோடி, காலங்கள் மாறும் , எதிர்காலத்தில் இன்னும் எத்தனையோ அரசுகள் வரும் ஆனால் வரலாற்றில் நின்றுவிட்ட பெருமகன் மோடி என்பதை காலம் சொல்லும், வருங்கால இந்தியா நிச்சயம் அவரை கண்ணீரோடு வாழ்த்தும்.

இன்று இந்தியா ஓரளவு பாதுகாப்பான தேசமாகவும் மோடி மிக பலமான தலைவராகவும் அறியபடுகின்றார், இந்தியா அதன் பொற்கால வாசலில் நுழைந்திருக்கின்றது., இந்திய பாதுகாப்பில் செயற்கைகோளை அடிக்கும் ஏவுகனைகள் என்பது மிகபெரிய மைல்கல் அதை மோடி அரசுதான் செய்தது, ரஷ்யாவுடன் மோடி செய்திருக்கும் அந்த எண்ணெய்க்கான கடல்வழி பலவகையில் தேசத்திற்கு நற்பயன் கொடுக்கும், கொரோனா அவராலே இந்தியாவி தன் கொடியல் கரங்களை அதிகம் நீட்ட முடியாமல் கட்டுபட்டு நிற்கின்றது. தேசமெங்கும் மருந்து கவசம் கொடுத்து இலவசமாக கொடுத்து காத்த பெருமகன் மோடி.

மோடி என்பது சாதாரண பெயர் அல்ல, இத்தேசத்தின் பெருமையினை மீட்டெடுத்து நிலைக்க வைக்கும் வரலாறு, ஊழலுக்கு அப்பாற்பட்டும், தனிபட்ட விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டும் தேசத்தை காக்கும் இரண்டாம் சாஸ்திரி மோடி, தன் குடும்பம் தன் வீடு என்றில்லாமல் நாட்டை நிரம்ப நேசிக்கும் இரண்டாம் காமராஜர் அந்த மோடி முழுக்க மிக சரியான நிபுணர்களையும், பெரும் ஆற்றலார்களையும் தன்னுடன் வைத்து அவர்களுக்கு மிகபெரும் சுதந்திரமும் கொடுத்து கண்காணிப்பவர் மோடி.

இது இந்துமக்கள் அதிகம் வாழும் நாடு, ஆனால் இந்திய பிரதமர் யாரும் இந்து கோவிலுக்கு செல்லவும் மாட்டார்கள், அதிகம் அதை காட்டிகொள்ளவும் மாட்டார்கள், தேசத்தில் இந்து பிரதமராக தயக்கமின்றி எல்லா கோவில்களுக்கும் சென்று இப்பண்பாட்டை மீட்டெடுத்த முதல் பிரதமர் மோடி, இந்து சமூகம் அதிகம் கொண்ட நாட்டின் பிரதமர் இதைத்தான் செய்ய வேண்டும், ஆனால் அப்படி ஒரு பிரதமருக்க்கு தேசம் கிட்டதட்ட 64 ஆண்டுகள் காத்திருந்தது. அது மோடியால் நிறைவேறிற்று

இந்து பெரும்பான்மை ஆட்சியில் எல்லா மத இன மக்களும் பாதுகாப்பாய் அமைதியாய் வாழமுடியும் என காட்டியவர் மோடி, தமிழை பேசிய முதல் பிரதமர் மோடி, தன் பேச்சுக்களிலெல்லாம் பாரதியா, திருகுறள் இன்னும் ராஜராஜ சோழனை எல்லாம் கொண்டாடிய முதல் பிரதமர் மோடி, வேட்டி சட்டை அணிந்து நின்ற முதல் பிரதமர் மோடி, டெல்லிக்கும் தமிழருக்குமான இடைவெளியினை குறைத்து நின்றவர் மோடி, அவர் காலத்தில்தான் இலங்கை படையினரின் துப்பாக்கி சூடு நின்றது, காவேரி சிக்கல் தீர்ந்தது, தமிழக ஆலய சிலைகளெல்லாம் வெளிநாட்டில் இருந்து சிக்கலின்றி வந்து சேர்ந்தது

வரலாற்றிலே முதன் முறையாக தன் திட்டத்தில் நடந்த முறைகேட்டு பணத்தை ஒரு பிரதமர் வசூலிக்கின்றார் என்றால் அது மோடிதான். தமிழ்நாட்டின் மிக சிறந்த அதிகாரிகளை தன் அலுவலகத்தில் வைத்து கொண்டு தமிழ்நாட்டை தனி கவனத்தில் அவர் எடுத்திருப்பது ஒன்றும் புரிய ரகசியமானது அல்ல, சமீபத்திய கவர்ணர் கூட அப்படித்தான், இதை நேரு, இந்திரா, மன்மோகன் என யாரும் செய்யவில்லை, மோடி அதை மிக சரியாக செய்கின்றார்

மோடி இந்நாட்டின் அரண், காலம் கொடுத்த கொடை, முன்னொரு காலத்தில் இங்கு பொற்கால ஆட்சி நடத்திய குப்தர்கள் சோழர்களின் மறுபிறப்பு, ஏதோ ஒரு ரிஷியின் தொடர்ச்சியினையும் அவரில் காணமுடியும். மோடி என்றொரு அரண் மட்டும் இவ்வளவு வலுவாக எழும்பியிராவிட்டால் தேசம் மிகபெரும் சிக்கலையும் குழப்பத்தையும் சந்தித்து மீளா சிக்கலில் வீழ்ந்திருக்கும், அதை தடுத்து தேசம் காக்க வந்தவர் மோடி

இன்று உச்ச அதிகாரம் அவர் கையில் இருக்கின்றது, மிகபெரும் மக்கள் செல்வாக்கும் இருக்கின்றது ஆனால் ஜனநாயகத்தையும் அதன் மாண்பையும் காத்து நிற்கின்றார். தேவையற்ற பேச்சு என்றோ, வீண் ஆரவாரமோ விளம்பரமோ அவரிடம் நீங்கள் காணமுடியாது. பேச்சினை குறைத்து செயல்களில் மட்டும் கவனம் செலுத்துபவர் அவர், மோடி பத்திரிகையாளரை சந்திப்பதில்லை எனும் ஒருகுற்றசாட்டு உண்டு, வரலாற்றில் நேருவும் இந்திராவும் இன்னும் பலரும் பத்திரிகையாளரை அதிகம் சந்தித்ததில்லை.

பத்திரிகை என்பது விளம்பரம் தேடி சம்பாதிக்கும் தொழில், அவர்கள் பிழைப்புக்கு நம் கருத்துக்கள் ஏன் தவறாக திரிக்கபட வேண்டும் எனும் ஒரு ராஜதந்திரம் எல்லா பிரதமர்களிடமும் உண்டு, மோடியிடமும் அது நிரம்ப உண்டு, ஆனால் தேச மக்களுடனும் இன்னும் பல தரப்பினருடனும் அவர் அனுதினமும் உரையாடி கொண்டேதான் இருக்கின்றார், வெற்றிபெறும் மாணவர்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அவர் அழைத்து பேச தயங்குவதில்லை இதில் தமிழ்நாட்டு மாணவர்களும் உண்டு

மோடி காலம் கொடுத்த கொடை, சுதந்திர இந்தியாவுக்கு புது வடிவம் கொடுத்தவர், பொருளாதார கொள்கை முதல் அணிசேரா கொள்கை வரை மாற்றி அமைத்தவர் அவரே, ரஷ்யா எனும் ஒற்றை நாட்டிடம் ஆயுத அடிமையாக இருந்த இந்தியாவினை அமெரிக்கா பக்கம் நெருங்க செய்து இருவருக்கும் இடையில் ராஜதந்திரமாக நாட்டுக்கு நலம் தேடி தரும் சாகசகாரர், அவரின் மேக் இன் இந்தியா திட்டமும், இந்தியா ஆயுத , அணுசக்தி ஏற்றுமதி நாடாக மாறும் எனும் கொள்கையும் வெற்றிபெற்று கொண்டிருக்கின்றன‌

மோடியால் நாடு பலம் பெற்றது, எல்லைகள் காவல் பெற்றன, உலகெல்லாம் தனி மரியாதை இந்தியாவினை தேடி வந்திருக்கின்றது, நிச்சயம் இந்திய வரலாற்றில் மாபெரும் முத்திரையினை பதித்து, புதிய இந்தியாவினை வடிவமைத்தவரில் மகா முக்கியமானவர் என பெயர் பெற்றுவிட்டார் மோடி, அவர் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் நாட்டுக்காக துடிக்கின்றது, நாட்டையே அவர் சுவாசிக்கின்றார், நாடு ஒன்றுக்காகவே அவர் வாழ்கின்றார்

அவரின் ஒவ்வொரு அசைவும் நாட்டு நலனையே சொல்கின்றன, காற்று வீசும் திசையினை நாற்று சொல்வது போல் மோடி செல்லும் திசையெல்லாம் நாட்டுக்கு இந்நலன் என எளிதாக சொல்லலாம், அவர் ஆட்சியில் ஒரு ஊழலை கூட அவரின் எதிரிகள் கூட சொல்லமுடியாது என்பதுதான் அவரின் மிகபெரிய வெற்றி 60 ஆண்டுகளாக பல அரசுகள் செய்ய தயங்கியதை 6 ஆண்டுகளிலே செய்து தேசத்தை பலமாக்கிய பெரும் தலைவர் மோடி

சுதந்திர இந்தியா 1947லே எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதை இப்பொழுது நம் கண்முன் காட்டி கொண்டிருக்கும் உண்மையான இந்திய தலைவன் மோடி, பல ஆயிரம் ஆண்டுகளாக தேசம் எதிர்பார்த்த அந்த உத்த தலைவனுக்கு, த‌லமை காவலனுக்கு, இரண்டாம் குப்தனுக்கு, வாழும் ராஜரிஷிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், கங்கையினை சுத்தபடுத்தி, காசியினை சுத்தபடுத்தி அப்படியே நாட்டின் எல்லா துறைகளையும் சுத்தபடுத்தி , எல்லைகளை பலபடுத்தி தேசத்தை மிக பலமாக வைத்திருக்கும் அந்த விஸ்வாமித்திரன் எல்லா நலன்களையும் பெற்று வாழட்டும் – ஸ்டான்லி ராஜன்