மகளின் கண்முன்னே கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தாய் பாலியல் பலாத்காரம்..

0
Follow on Google News

கொரனோ தொற்று பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று மகளுடன் வீடு திரும்பிய போது இருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலம் சரெய்தேவ் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் இருந்து 25கி.மீ. தொலைவில் உள்ள அவரது வீட்டிற்கு தனது மகளுடன் சென்று கொண்டு இருந்தார்.அப்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நடந்தது இவரது மகளின் கண் முன்னே.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் கூறுகையில் எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டதால் நாங்கள் தனிமைப்படுத்திக் ஒரு வாரமாக இருந்து வந்தோம். ஆனால் எனது தாய் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமானதால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தனர். எனது தாய்க்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என்று வந்ததால் மருத்துவர்கள் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தினார்.

நாங்கள் வீட்டிற்கு செல்ல ஆம்புலன்ஸ் கேட்டோம் ஆனால் மருத்துவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். வேறு வழியின்றி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தோம் அப்போது தான் 2 மர்ம நபர்கள் நீங்கள் பின்தொடர்ந்து என் கண்முன்னே என் தாயை பலாத்காரம் செய்து விட்டனர். மகளின் கண் முன்னே நடந்த இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.