சூர்யாவுக்கு தனியாக இரண்டு போலிஸார் பாதுகாப்பு!

0
Follow on Google News

சூர்யாவின் வீட்டுக்கு 5 போலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட நிலையில் இப்போது அவருக்கு தனியாக இரண்டு போலிஸார் ஆயுதத்தோடு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். சூர்யா நடித்து தயாரித்த ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி பாராட்டுகளையும் சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.

படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகமக்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது சம்மந்தமாக பாமகவினர் சூர்யாவின் மிது கோபத்தில் உள்ளனர். திரைத்துறையினர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையிக் சூர்யா உயிருக்கு ஆபத்து இருப்பதால் சூர்யாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 ஆயுதம் தாங்கிய போலிஸார் அவர் வீட்டுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சூர்யாவுக்கு என்று தனியாக இரண்டு ஆயுதந்தாங்கிய போலிஸார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் சூர்யா எங்கு சென்றாலும் கூடவே சென்று பாதுகாப்பு அளிப்பார்கள் என சொல்லபடுகிறது.