மனைவியின் கள்ள காதலனிடம் இருந்து பாலாவுக்கு வந்த மிரட்டல்..! பாலா என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

பல கோடி செலவில் பிரமாண்டமாக படம் எடுத்து பெயர் பெரும் இயக்குனர் மத்தியில், ஒரு திண்ணையில் இரண்டு கதாபாத்திரங்களை நடிக்க வைப்பதின் மூலம் மக்களின் மனதை உருக வைத்து தனது படைப்புகளால் ரசிகர்கள் மத்தியில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் கொஞ்சம், நஞ்சம் இல்லை. பாலா இயக்கும் படம் அனைத்தும் மற்ற எந்த ஒரு படத்தின் சாயல் இல்லாமல், இது பாலாவின் படைப்பு என படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை அமைத்திருக்கும்.

சினிமாவில் கொடூரமான படைப்புகளால், சைக்கோ இயக்குனர் என அழைக்கப்பட்டாலும், குடும்பத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் மீது அதிகம் பாசம் வைதுள்ளவர் பாலா. பெரும்பாலன சினிமா நிகழ்ச்சிகளில் மனைவியுடன் தான் கலந்து கொள்வார். அவர் என் மீதும், எனது மகள் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர் என பல முறை பாலா மனைவி முத்துமலர் தெரிவித்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதத்தில் பாலா – முத்துமலர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.

இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், பாலா அவரது மனைவி முத்துமலர் இருவரும் கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து தான் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியது. முக்கிய அரசியல் தலைவர் ஒருவரின் மகனுடன் நெருங்கி பழகி வந்த முத்துமலர், அந்த முக்கிய அரசியல் தலைவர் மகனுடன் அடிக்கடி வெளிநாட்டு, டெல்லி என செம்ம லூட்டி அடித்து வந்த விஷயம் கணவர் பாலாவுக்கு தெரிவந்தது இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இவர்கள் பிரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கும் முன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்த பாலா – முத்துமலர் தம்பதியினர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ரகசியமாக விவாகரத்து வழக்கு பதிவு செய்து சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தவர்கள். ஏன் நான்கு வருடங்களுக்கு முன் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட போதே விவாகரத்து வழக்கு பதிவு செய்யாமல் தாமதம் செய்தார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

முத்துமலர் – பாலா விவாகரத்து பெற்று பிரிந்த பின்பு தான் முத்துமலர் அரசியல் கட்சி தலைவர் ஒருவரின் மகனுடன் கள்ள தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியானது, அரசால் புரசலாக முத்துமலரின் கள்ள காதலன் யார் என்கிற தகவலும் வெளியானது. இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே தடம்மாறி சென்ற மனைவி முத்துமலரை விவாகரத்து செய்து விட வேண்டும் என்கிற முடிவில் தான் இருந்துள்ளார் பாலா.

ஆனால் பாலா மனைவியை விவாகரத்து செய்தால் அதன் பின்னணி காரணம் முத்துமலர் கள்ளக்காதலன் தான் என்பது தெரியவந்து விடும் என்பதாலும்,அப்போது முத்துமலர் கள்ளகாதலன் ஆளும் கட்சியை சேர்த்தவர் எனபதால், முத்துமலரை விவாகரத்து செய்ய கூடாது என கள்ள காதலன் தரப்பில் இருந்து பாலாவுக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆளும் கட்சியை பகைத்து கொண்டால், தான் சினிமா துறையில் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதால் மனைவி முத்துமலரை விவாகரத்து செய்யாமல் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் பாலா.

இந்நிலையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்பு நடந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்பு இனி மனைவி முத்துமலரின் கள்ள காதலனால் தனக்கு சினிமாவில் எந்த ஒரு நெருக்கடியும் இருக்காது என்பதை உறுதி செய்த பாலா, இதற்கு பின்பு தான் விவாகரத்து வழக்கு பதிவு செய்து பாலா மற்றும் அவரது மனைவி இருவரும் சட்டப்படி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்ததாக கூறப்படுகிறது.

ப்ளீஸ் எங்களை விட்டுடும்மா… ஐஸ்வர்யா கொடுமை தாங்க முடியாமல் கதறும் மகன்கள்..! என்ன டார்ச்சர் தெரியுமா.?