காக்க வைத்து ஏமாற்றிய சூர்யா….நீ யாரு எனக்கு வாய்ப்பு கொடுக்க என கடுப்பாகி ஹரி என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக சூரரைப் போற்று படம் வெளியானது. இந்தப் படம் முடித்த கையோடு இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமானார். ஒன்று, ஹரி இயக்கத்தில் அருவா, மற்றொன்று வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’. முதலில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது, தொடர்ந்து 8 படங்கள் வரை தோல்வி படங்களை கொடுத்து வந்த சூர்யா சமீபத்தில் வெளியான சூரரை போற்றும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் ஹரியிடம் சூரரை போற்று படத்தில் நடித்த போதே அடுத்த படத்துக்கான கதை தயார் செய்ய கேட்டு கொண்டுள்ளார், இதனை தொடர்ந்து அருவா படத்தை சூர்யாவுக்காக தயார் செய்துள்ளார், கதையை கேட்ட சூர்யா அருமையாக இருக்கு விரைவில் இந்த படத்துக்கான தயாரிப்பாளரை ஏற்பாடு செய்கிறேன் என சூர்யா உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இதே போன்று வெற்றிமாறனிடமும் கதை கேட்டுள்ளார் சூர்யா, அந்த படத்துக்கு வாடிவாசல் என பெயரிடப்பட்டது, ஆனால் இருவரிடமும் கதையை கேட்டுவிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ படப்பிடிப்பை தொடங்கினர் சூர்யா இது இயக்குனர் ஹரிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. பாண்டிராஜ் இயக்கிவரும் ‘சூர்யா 40’ படத்தை முடித்த கையோடு, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ செப்டம்பரில் துவங்க இருப்பதுவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து சூர்யாவுக்காக கதையை தயார் செய்துவிட்டு காத்திருந்த இயக்குனர் ஹரி, முறையான பதில் ஏதும் வராத காரணத்தினால் ஏமாற்றம் அடைந்து வேறு ஒரு நடிகரை வைத்து படமாக்க முடிவு செய்த ஹரியிடம் சினிமா துறையை சேர்ந்த ஒருவர், கோவித்து கொள்ளாதீர்கள், நீங்க எடுத்த கடைசி படம் சாமி இரண்டாம் பாகம் தோல்வியை தழுவியதை தொடர்ந்து உங்கள் இயக்கத்தில் நடிக்க சூர்யா தயக்கம் காட்டுகிறார், மற்றொரு கதையில் உங்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பமாக உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு கடுப்பான இயக்குனர் ஹரி, அவர் யாருய்யா எனக்கு வாய்ப்பு கொடுக்க, நான் எடுத்த ஒரு படம் தோல்வி, அவர் கடைசியா நடித்த 9 படம் தோல்வி, ஏன் அவரை வைத்து இயக்குனர்கள் படம் எடுக்க முன்வர வில்லையா. இதே கதையில வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து எனக்கு எப்படி வெற்றி கொடுக்க முடியும் என்று தெரியும் என தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து பாண்டியராஜன் மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்து முடித்த பின்பு இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சூர்யா நடிப்பில் ஹரி இயக்க இருந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருந்தநிலையில், தற்போது அந்தப் படத்துக்கான ஒப்பந்தத்தை சிவா படத்துக்காக வழங்கியிருக்கிறார் சூர்யா என தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து தான் நடிக்கும் படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவி வரும் நிலையில், வெற்றி இயக்குனர்கள் படங்களில் மட்டும் நடிக்க சூர்யா ஒப்பந்தம் செய்து வருவது குறிப்பிடதக்கது.