என்னுடைய மகனுக்கு மூணு வயசாச்சு: ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்.

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவன் இயக்கத்தில் ‘சாணிக்காயிதம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களிலும் பிசியாக வலம்வந்துகொண்டிருக்கும் சமீபத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். அதில், ‘எனது ஆண் குழந்தைக்கு 3 வயது ஆகிவிட்டது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் முதல்நாளில் பார்த்ததுபோலவே இப்போதும் இருக்கிறான். என்னுடைய சிறப்பான நாட்களிலும், இருண்ட நாட்களிலும் அவன் கொடுத்த மகிழ்ச்சி கற்பனை செய்ய முடியாதது. என்மீது அளவுகடந்த அன்பு செலுத்தும் அவனை நான் நேசிக்கிறேன். அன்பே NYKE.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், உண்மையில் அவர் என்னுடைய குழந்தை என்று சொன்னது அவர் செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டி NYKE-ஐத்தான். அந்த நாய்க்குட்டியை அவர் தூக்கி கொஞ்சுவதுபோலவும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நாய்க்குட்டியை கீர்த்திசுரேஷ் தன்னுடைய மகனைப்போல் வளர்த்து வருவதைத்தான் அப்படி குறிப்பிட்டுள்ளார்.