ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்தி கஸ்தூரி ராஜா பண மோசடி..! ரஜினிகாந்த் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா அவரது கணவர் தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்து, தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், இந்நிலையில் நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா தனது சம்மந்தி ரஜினிகாந்த் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு, அந்த சம்பவம் குடும்பத்தில் பெரும் பூதாகரமாக வெடித்த தகவல் ஓன்று தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் கஸ்தூரி ராஜா கடன் சுமையால் தத்தளித்து கொண்டிருந்த போது, தனது இரண்டு மகன்கள், செல்வராகவன், தனுஷ் இருவரையும் சினிமாவில் களம் இறக்கி வாங்கிய கடனை அடைக்க திட்டமிட்டார், அதன்படி துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோவாக தனுஷ் , இயக்குனராக செல்வராகவன் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த படம் ஹிட் அடித்து கடனில் தத்தளித்த கஸ்தூரி ராஜாவை காப்பாற்றியது.

கடனை அடைக்க மகன்கள் இருவரையும் சினிமாவில் அறிமுகம் செய்தார் கஸ்தூரி ராஜா, ஆனால் இருவரும் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தனர். இதில் தனுஷ் சூப்பர் ஸ்டார் மகளை திருமணம் செய்து செட்டிலானார். செல்வராகவன் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து காணாமல் போனார். கஸ்தூரி ராஜா குடும்பத்துக்கு ஒரே வருமானம் நடிகர் தனுஷ் தான் இவர் தான் மொத்த குடும்பத்துக்கு காமதேனு பசு என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இடையில் கஸ்தூரி ராஜாவுக்கு பொருளாதார சிக்கல் காரணமாக, தனது சொந்த ஊர் தேனீ மாவட்டத்தில் உள்ள தொழில் அதிபர் ஒருவரிடம் 80 லட்சம் வரை கடன் வங்கியுளளார், இதே போன்று இன்னும் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார் கஸ்தூரி ராஜா, கடன் வாங்கிய அனைவரிடம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்மந்தி என்னால் கடனை திரும்பி கொடுக்க முடியவில்லை என்றால் எனது சம்மந்தி உதவி செய்வார் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் கஸ்தூரி ராஜா கடனை கொடுக்க முடியாமல் இழுத்தடித்துள்ளார், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க தொடர்ந்து ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்தி காலத்தை கடத்தி கொண்டே வந்துள்ளார். இதனை தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் இதை ரஜினிகாந்த் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர், இதை அறிந்த ரஜினிகாந்த் தனது பெயரை பயன்படுத்தி கஸ்தூரி ராஜா மோசடியில் ஈடுபட்டு வருவதை கேட்டு அதிர்ச்சியடைத்துளளார்.

கஸ்தூரி ராஜா வாங்கிய 80 லட்சம் கடன் ரஜினிகாந்த் அவர்களுக்கு பெரிய தொகை கிடையாது, கொடுத்து உதவி செய்திருக்கலாம், ஆனால் கஸ்தூரி ராஜாவுக்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பகிரங்கமாக தெரிவித்து விட்டதாக கூறப்படும் நிலையில், கஸ்தூரி ராஜாவை கடன்காரர்கள் கடும் நெருக்கடி கொடுத்த பின்பு மகன் தனுஷ் உதவி செய்து தந்தையை மீட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருந்தே ரஜினிகாந்த் மீது கஸ்தூரி ராஜாவுக்கு கோபம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.