பாகுபலிக்கு பின் காணாமல் போன அனுஷ்கா… இப்போது ரி எண்ட்ரி!

0
Follow on Google News

அனுஷ்கா சில வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்க உள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அளவுக்கு ரசிகர்களைக் கொண்டவர் அனுஷ்கா. சொல்லப்போனால் நயன்தாராவுக்கு முன்பாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வெற்றி பெற்றவர்.

கடைசியாக அவர் நடித்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 இந்தியா முழுவதும் ஹிட் அடித்தது. ஆனால் அதன் பிறகு அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. அதற்கு அவரின் உடல் எடை அதிகமானதே காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம். இவர்கள் இருவரும் ஏற்கனவே தெய்வ திருமகள் மற்றும் தாண்டவம் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.