பாகுபலி, கே.ஜி.எப்பை மிஞ்சும் நான் நடித்த திரைப்படம் …. சவால் விடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

0
Follow on Google News

சென்னை : மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ்திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் கதிர். கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு பாணியை வகுத்துள்ளார் கதிர். இதனால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரது திரைப்படங்கள் கமர்ஷியலாகவும் அதேநேரத்தில் வசூல்ரீதியாகவும் தயாரிப்பாளர்களை கைவிட்டதில்லை.

இந்நிலையில் கதிர், ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா ரெட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சுழல். இந்த படத்தின் கதையை புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதியுள்ளனர். விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கியது இந்த ஜோடிதான். இந்த திரைப்படத்தை இயக்குபவர்கள் குற்றம் கடித்தால் மற்றும் மகளிர் மட்டும் படத்தை இயக்கிய பிரம்மா.

பிரம்மாவுடன் இணைந்து இயக்கம் இன்னொரு இயக்குனர் கிருமி படத்தை டைரக்ட் செய்த அனுசரண். இருவர் கதை எழுத இருவர் இயக்க முன்னணி நடிகர்கள் நடிக்க என படம் வெளிவரும் முன்னரே பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் 30 மொழிகளில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் ரிலீசாகாமல் நேரடியாக ஓடிடியில் ஜூன் 17 அன்று ரிலீசாகிறது.

இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜார்னரில் தயாராகியுள்ள இந்த படம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என படக்குழுவினர் கூறிவருகின்றனர். இந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில் ” பாகுபலி ஆர்.ஆர்,ஆர். கே.ஜி.எப் போன்ற பார்வையாளர்களை கவர்ந்த படங்களை பார்த்துள்ளோம். இந்த சுழல் திரைப்படம் அதையெல்லாம் மிஞ்சும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதுபோன்ற திரைப்படங்களை பார்த்தபோது நானும் திரையோடு ஒட்டிக்கொண்டேன். அதுபோல ஒரு படத்தில் நடிக்கமாட்டோமா என ஏங்கியிருக்கிறேன். சுழல் வார்டோக்ஸ் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பில் நானும் ஒரு அங்கமாக பங்கேற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் மோதல்…. திருமணம் முடிந்த மூன்றே நாளில் வெடித்த பிரச்சனை என்ன தெரியுமா.?