என் மகன் விஜய் கூட நடிக்கணுமா .? ஆரம்பத்திலே ஸ்ட்ரிக்டா கண்டிஷன் போட்ட பிரசாந்த் தந்தை…

0
Follow on Google News

விஜய் நடித்துள்ள லியோ படம் பிரம்மாண்ட ரிலீஸுக்காக தயாராகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச்சுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்தவாறே லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி68 படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்த்து கடுப்பான நடிகர் விஜய், வெங்கட் பிரபு மற்றும் அவர் சார்ந்த டெக்னீஷியன்களை அழைத்து லியோ படம் வெளியாகும் வரை தளபதி68 படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் வெளிவரக் கூடாது என்று கூறியிருக்கிறார். ஆனால் அவரையும் மீறி இப்போது தளபதி 68 ல் யார் யார் நடிக்கிறார்கள் என்பது வரைக்கும் நாள்தோறும் பல தகவல்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

அப்படி வெளியான அப்டேட் தான் இது!! ஆமாங்க நடிகர் பிரசாந்த் தளபதி 68 ல் இணைகிறார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இது விஜய் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து விஜய் , அஜித்துக்கு டஃப் கொடுத்த நடிகர் பிரசாந்த், இப்போது விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் இணைகிறார் என்றால் வியப்பாகத் தானே இருக்கும்.

இந்தத் தகவல் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும், நடிகர் பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இதை வைத்து ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார். நடிகர் பிரசாந்தின் ஆரம்பாகால சினிமா வாழ்க்கையிலிருந்து இன்று வரை அப்பாவின் தலையீடு அதிகமாகவே இருக்கிறது. அவ்வாறு தற்போது இப்படத்திலும் பிரசாந்த் இணைவதற்கு அவரது மாஸ்டர் பிளானே காரணம் என்று கூறப்படுகிறது.

நடிகர் பிரசாந்தும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லைனு அப்பா கூறுவதை கேட்டு முடிவு எடுத்துள்ளார். அப்படி என்ன பிளான் போட்டிருக்கிறார் தியாகராஜன்? ஆரம்பகாலத்தில் தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருந்த பிரசாந்த்துக்கு இடையே சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் இருந்து மறைந்த பிரசாந்த் தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில் கதாநாயகனாக ரசிகர்களைக் கவர்ந்த பிரசாந்த் தெலுங்கில் கேரக்டர் ரோல் செய்ததைக் கண்டு அவரது ரசிகர்கள் பலரும் ஆதங்கப்பட்டனர். இந்நிலையில், தெலுங்கு சினிமாவுக்கே கொதித்தெழுந்த ரசிகர்கள் தமிழில் விஜய்க்கு அண்ணனாகவோ அல்லது தோழனாகவோ நடித்தால் சும்மா இருப்பார்களா என்ன? கொதித்தெழுவார்கள் இல்லையா? ஆம், நீண்ட காலம் தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் பிரசாந்திற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

அவ்வாறு இருக்கையில், நடிகர் விஜயின் படத்தில் பிரசாந்த் நடிக்கும் போது விஜய்க்கு நிகரான ஒரு கேரக்டராகத்தான் கொடுப்பார்கள். சொல்லப்போனால், நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய்க்கு கிடைத்த இமேஜ் போல, நடிகர் பிரசாந்துக்கும் இப்படம் ஒரு கம்பேக் படமாக அமையும், இந்த வாய்ப்பை வைத்தே பிரசாந்த் நடித்து இன்னும் ரிலீஸாக முடியாமல் தவிக்கும் அந்தகன் படத்திற்கு ஒரு ப்ரோமோஷன் செய்து விடலாம் என்று இந்த படத்தில் நடிக்க தியாகராஜன் சம்மதம் தெரிவித்திருப்பார் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இப்படத்தில் பிரசாந்த நடிக்க வேண்டுமென்றால் சில கண்டீசன்களையும் தியாகராஜன் போட்டிருக்கிறாராம். அதன்படி, பிரசாந்த் நடிக்கும் எந்த காட்சிகளையும் எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கிவிடக் கூடாது என்றும் 30 நாள்கள் கால்ஷீட் கொடுக்கிறார் என்றால் அந்த 30 நாள்கள் என்னென்ன நடித்தாரோ அதெல்லாம் படத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறாராம்.