நரம்பு புடைக்க மும்மொழி கல்வியை எதிர்த்த சூர்யா குழந்தைகளா இது… என்ன சூர்யா இதெல்லாம்.?

0
Follow on Google News

கடந்த சில வருடங்களாகவே கணவன் சூர்யா  சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்தை தன்னுடைய பூர்விகமான மும்பையிலே முதலீடு செய்ய வைத்து வந்துள்ள ஜோதிகா, இதனால் பெரும் லாபத்தை சம்பாரித்து வந்த சூர்யா, பெரும்பாலும் சென்னையை விட மும்பையில் தான் குடும்பத்துடன் அதிக நாட்கள் கடந்த சில வருடமாக தங்கி வந்தார்.

ஜோதிகாவை திருமணம் செய்வதற்கு முன்பு தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில் செய்து வந்த சூர்யா. திருமணத்திற்கு பின்பு மனைவி ஆலோசனைப்படி கோடி கணக்கில் மும்பையில் பிரபல நிறுவனத்தில் முதலீடு செய்ய தொடங்கினார். இதுவரை சுமார் 300 கோடி வரை மும்பையில் முதலீடு செய்துள்ள சூர்யா – ஜோதிகா தம்பதியினர் சினிமாவில் சம்பாரிப்பதை விட, தொழில் ரீதியாக பெரும் வருமானத்தை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் படித்து கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் மும்பையில் உள்ள பள்ளியில் சேர்த்து, குடும்படுத்துடன் மும்பையில் நிரந்தரமாக குடியேறிய சூர்யா. மேலும் நடிகர் சூர்யா சென்னையில் அரண்மனை போன்று மிகப் பெரிய வீடு ஏற்கனவே உள்ள நிலையில், மும்பையில் குடியேறியுள்ள சூர்யா, ஏற்கனவே மும்பையில் சூர்யாவுக்கு வீடு இருக்கையில் மேலும் மும்பையில் சுமார் 68 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய டபுள் எக்ஸ் வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ள சூர்யா நிரந்தரமாக மும்பையில் வசிப்பது என முடிவு செய்துவிட்டார் என தகவல் வெளியானது.

இந்நிலையில் மும்பையை பூர்விகமாக கொண்ட ஜோதிகா அவருடைய தாய் தந்தை இருவரும் இந்தி சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி, தன்னுடைய கணவர் சூர்யாவை இந்தி படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இடம் பெற செய்ய வேண்டும் என்கிற திட்டத்துடன், இந்தி சினிமாவில் சூர்யாவை நடிக்க வைக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாகவே ஜோதிகா ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டு வந்தது.

சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்ற படம் சூரரை போற்று, இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் சுதாகொங்கரா , இந்த படத்தில் கேமியோ ரோல் பண்ண இருக்கும் சூர்யா, இதனால் இந்தியில் ஹீரோவாக என்ட்ரி கொடுப்பதற்கு முன்பு, கேமியோ ரோல் இந்தி சினிமா ரசிகர்ககள் மத்தியில் தனக்கு ஒரு அறிமுகம் கிடைக்கும் என எதிர்பார்த்து கேமியோ ரோல் செய்கிறார் சூர்யா.

மேலும் இந்தியில் ஹீரோவாக நடிக்க பல ஹிந்தி இயக்குனர்களிடம் சூர்யா கதை கேட்டு வந்த நிலையில், தற்பொழுது ஹிந்தியில் ஹிட் படம் கொடுத்த முன்னணி இயக்குனர் படத்தில் கமிட்டாகி உள்ளார் சூர்யா என்கிற தகவல் வெளியானது. பொதுவாகவே, சென்னையை விட பெருமைப்பாலும் மும்பையில் செட்டிலாகி உள்ள சூர்யா. மும்பையில் குடும்பத்துடன் அடிக்கடி அவர் வெளியில் செல்லும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சமீபத்தில் ரசிகர்களைச் சந்தித்த சூர்யா, அவர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது மும்பையில் அவர் செட்டிலாகிவிட்டதாகக் கூறப்படுவது பற்றி ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த சூர்யா தனது மகள் தியா, மகன் தேவ் இருவரும் மும்பையில் படித்து வருகின்றனர். அவர்களைப் பார்க்க அடிக்கடி அங்கு சென்றுவருகிறேன். மற்றபடி நான் சென்னையில்தான் இருக்கிறேன். மும்பையில் செட்டிலாகவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சூர்யா அவருடைய குழந்தைகளை படிக்க வைக்க ஏன் தமிழ்நாட்டில் ஒரு சிறந்த பள்ளி கூடவா அவர் கண்ணில் தென்படவில்லை, அல்லது தமிழ்நாட்டில் படித்தால் அவர்கள் குழந்தைகள் படிக்காத என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் நீட் தேர்வு, மும்மொழி கொள்கைக்கு எதிராக கடந்த காலங்களில் எதிர்த்து குரல் கொடுத்து வந்த நடிகர் சூர்யா அவருடைய இரண்டு குழந்தைகளை மும்பையில் படிக்க வைத்து வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.