இமான் முதல் மனைவிக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த டார்ச்சர்… இருவருக்கும் இடையில் இருந்த தொழிலை மீறிய உறவு..

0
Follow on Google News

சில மாதங்களுக்கு முன்பு இமான் அளித்த ஒரு பேட்டி சினிமா வட்டாரத்தில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது, அதில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் இந்த ஜென்மத்தில் அவரை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறி பிரச்சினையை கிளப்பிவிட்டார். மேலும், அவர் என்ன துரோகம் செய்தார் என்பதை என்னால் வெளியில் சொல்ல முடியாது, அது என் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று முழுமையாக சொல்லாமல் பாதியை மட்டும் கூறியிருந்தார்.

இமானின் இந்த பேட்டி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் தான் காரணம் என்றும் பேசப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் மொத்த இமேஜும் நொடிப்பொழுதில் நொறுங்கியது. ஆனால், சிவகார்த்திகேயன் எங்களை சேர்த்து வைப்பதற்கு தான் முயற்சி செய்தார்… அதனால் தான் இமான் இவ்வாறு குற்றச்சாட்டு வைக்கின்றார் என்று மோனிகா பதில் அளித்தார்.

மேலும் ‘சிவகார்த்திகேயன் ஒரு ஜென்டில்மேன், எங்கள் குடும்பத்திற்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்து வந்தது..தன் நண்பரின் குடும்பம் பிரிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் எங்களைச் சமாதானம் செய்து வைக்கத்தான் அவர் வந்தார். ஆனால், அதையும் மீறி இமான் என்னை மிரட்டி விவாகரத்து வாங்கினார். இமானுக்கு இப்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லை..அதனாலேயே சிவ கார்த்திகேயன் மீது பழி போடுகிறார்’ என்று மோனிகா பேசியிருந்தார் .

இந்நிலையில் இமான் குற்றசாட்டு குறித்து சிவகார்த்திகேயன் வாயைத் திறக்காமல் இருக்கும் நிலையில், மோனிகா வாய் திறந்து பேசியது, சிவகார்த்திகேயன் தான் மோனிகாவை பின்னணியில் இருந்து பேச வைத்துள்ளார் என்கிற விமர்சனம் எழுந்தது. இமான் – சிவகார்த்திகேயன் விவகாரம் வெளிச்சத்துக்கு வருவதற்கு பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று வைரலானது.

அதில் பிரபல இசையமைப்பாளரின் மனைவி உடன் மாஸ் நடிகர் தொடர்பில் இருந்தார். அந்த இசையமைபாளர் முதல் மனைவியை விவகாரத்து செய்ய காரணமே அந்த நடிகர் என அந்த பத்திரிகையாளர் பேசியது தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளார் இமான் – சிவகார்த்திகேயன் விவகாரம் தான் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

மேலும் சிவகார்த்திகேயன் இவ்வளவு மோசமானவரா? என சிவகார்த்திகேயனை கொண்டாடி வந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்த விவகாரம் சிவகார்த்திகேயன் இமேஜை மிக பெரிய அளவில் டேமேஜ் செய்தது. இருந்தும் இமான் விவகாரத்தில் வாயை திறக்காமல் இருந்த சிவகார்த்திகேயன் பதில் அளிக்காமல் மௌனம் காத்து வந்தார்.

இந்நிலையில் இமான் மனைவி மோனிகா குறித்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் டிரண்டாக்கி வருகின்றனர். அந்த வீடியோவில், இசையமைப்பாளர் இமான் குறித்தும் அவரது மனைவி மோனிகா குறித்தும் சிவகார்த்திகேயன் பேசுகையில், நான் இமான் அண்ணா குடும்பத்துடன் நெருங்கி பழகி வருகிறேன். அவரை எப்போதும் அண்ணா என்று தான் கூப்பிடுவேன். அதேபோல அவரது மனைவி மோனிகாவை அண்ணி என்று தான் கூப்பிடுவேன்.

இப்போதெல்லாம் இமான் அண்ணாவுக்கு போன் பண்ணி பேசுகிறேனோ இல்லையோ அன்னிக்கு போன் பண்ணி டார்ச்சர் செய்து கொண்டே இருப்பேன். அவங்களோ, ஏன் கொழுந்தனாரே இப்படி பண்ணுறீங்க என சொல்வார். இது தொழிலை மீறிய ஒரு உறவு” என சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது, கடந்த சில நாட்கள், இமான் – சிவகார்த்திகேயன் விவாகரத்துக்கு ஓய்வு கொடுத்திருந்த இணையவாசிகள் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனை வருத்தெடுக்க ஆரம்பித்து பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.