என்னை சீண்டிவிட்டிர்கள்… நான் என்ன செய்ய போகிறேன் பாருங்க… எச்சரிக்கும் ப்ளூ சட்டை மாறன்..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்துவரும் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் மற்றும் யூ ட்யூப் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒரு சில யூ டுயூப் சேனலில் பங்கேற்று பேசுகின்றவர்கள், ப்ளூ சட்டை மாறனை மிக கடுமையாகவும் கொச்சை வார்த்தைகளாலும் விமர்சனம் செய்து வருவது குறித்து ப்ளூ சட்டை மாறன் கோபத்தில் கொந்தளித்துள்ளார்,அதில்.

இனி பேச்சே இல்லை. வீச்சுதான் என தெரிவித்துள்ள ப்ளூ சட்டை மாறன், நான் தப்பா பேசியிருந்தா சம்மந்தப்பட்ட நடிகர் வழக்கு தொடுக்கட்டும். அதை எனது வழக்கறிஞர்கள் மூலம் சந்திக்கறேன். சிறை தண்டனை விதித்தால்  உள்ளே போகிறேன். நான் தரம் தாழ்ந்த விமர்சனம் செய்வதாக  அறிவுரை சொல்லி, எச்சரிக்கை விடுத்த யோக்கிய சிகாமணிகளே.. இந்த உத்தமர்களின்  தரம் குறித்து கேள்வி கேட்க உங்களுக்கு வக்கு இருக்கிறதா? இப்போது மட்டும் உங்கள் அறச்சீற்றம் எந்த பொந்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது?

இதற்கு உங்களிடம் பதில் இல்லையென்றால்…  இனி என்னைப்பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லையென்று அர்த்தம். உங்கள் வேலை எதுவோ அதை மட்டும் பார்க்கவும். உங்கள் உபதேச வெங்காய மூட்டைகளை அவிழ்க்க வேண்டாம் என எச்சரித்த ப்ளூ சட்டை மாறன், மேலும். முதலில் என் மீது இவர்களில் யாரேனும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ வழக்கு தொடுக்கட்டும். அதன்பிறகு அவர்கள் பேசிய பேச்சுகளை ஆதாரமாக வைத்து நான் வழக்கு தொடுக்கிறேன்.

உதாரணம்: போலியான வசூல் கணக்கை சொல்லி பொய்க்கணக்கு காட்டுதல், தனிநபரை கொச்சையாக பேசுதல் உள்ளிட்டவை. ஒவ்வொருவரின் ட்வீட் மற்றும் யூட்யூப் பேட்டிகளுக்கான ஸ்க்ரீன் ஷாட், லிங்க் உள்ளிட்டவை என்னிடம் உள்ளன. நீங்கள் விரைவில் வழக்கு தொடுக்கும் ஆட்டத்தை ஆரம்பியுங்கள். ஐ ஆம் வைட்டிங். என தெரிவித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

மேலும், இதுவரை உங்களைப்பற்றி நான் பேசியதே இல்லை. நீங்கள் வாயை விட்டதற்கு எதிர்வினை மட்டுமே ஆற்றியுள்ளேன். ஆகவே முதல் விசாரணை உங்களிடம் இருந்தே துவங்கும். இப்படி கொச்சையான Thumbnail வைப்பது, அநாகரீக ஆட்களை பேட்டி எடுப்பது, அதில் பேசப்படும் கொச்சையான வார்த்தைகளை அப்படியே வெளியிடுவது என ஊடக தர்மத்திற்கு எதிராக செயல்படும் சேனல்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்படும்.

‘அனைத்து வார்த்தைகளுக்கும் பங்கேற்பாளர்களே பொறுப்பு. எங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை’ என பொறுப்பு துறப்பு போட்டு நீங்கள் தப்பி விட இயலாது என எச்சரித்த ப்ளூ சட்டை மாறன், மேலும் ‘கண்ணில் சொட்டு மருந்து போட்டதால்.. தெரியாமல் ஷேர் செய்துவிட்டேன்’ என்று உச்சநீதிமன்றத்தில் .எஸ்.வி.சேகர் சொன்னதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்த செய்தியை படித்தீர்களா அல்லது ஜெயிலர் பற்றி வடை சுடவே நேரம் போதவில்லையா?

ஆகவே நீதிமன்றத்தில் நீங்கள் சொல்லும் சாக்குகள் எதுவும் பலிக்காது. செய்தி சேனல் விவாத நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்புகையில்… யாரேனும் கொச்சையாக பேசினால் ‘வார்த்தைகளில் கவனம் தேவை. இதை அனுமதிக்க இயலாது’ என்பார் நெறியாளர். அதை மீறி பேசினால் அவரது மைக் அணைக்கப்படும். மேலும் பொங்கினால் அந்த நபரின் திரை நீக்கப்படும் அல்லது அவர் வெளியேற்றப்படுவார்.

அதன்பிறகு ரெகார்ட் செய்யப்பட்ட வெர்ஷன் வரும்போது அந்த நபர் பேசிய கெட்ட வார்த்தைகள் பீப் செய்யப்படும் அல்லது நீக்கப்பட்டிருக்கும். இதுதான் ஊடக அறம். இதை செய்யாமல்… வீடியோக்களை வெளியிடும் யூட்யூப் சேனல்களின் எடிட்டர்கள்,  நிர்வாகிகள், முதலாளிகள் மற்றும் களத்தில் இருக்கும் ஆங்கர்களே… இதுதான் உங்கள் தரமா? என கேள்வி எழுப்பியுள்ள ப்ளூ சட்டை மாறன்.

மேலும், ரஜினி எனும் நடிகரை புகழ்ந்து தள்ளுங்கள். 1,000 கோடி, 2,000 கோடி வடைகளை சுடுங்கள். ஆனால் அவருக்கு இணையாக என் போன்ற வன்ம கக்கியின்  போட்டோவை Thumbnail ஆக வைத்து ரஜினி மற்றும் உங்கள் சேனலின் தரத்தை இறக்கி கொள்ளாதீர்கள். பருந்துகள் பருந்துகளாக வானில் இருப்பதே உங்களுக்கு பெருமை.

இனியும் தாமதிக்காமல்  சம்மந்தப்பட்ட நடிகர்கள், யூட்யூப் சேனல்கள் அல்லது அந்த உலகமகா விருந்தினர்கள்… உடனே வழக்கு தொடுக்கவும். இனி பேச்சே இல்லை. வீச்சுதான் என்பதை செயலில் காட்டுங்கள். இது உங்கள் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால். தன்மானம் இருந்தால் உடனே செயலில் இறங்கவும். வாயில் சுட்ட வடைகள் எல்லாம் போதும் என சவால் விடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.