நடிகர் அரவிந்த் சாமியின் உண்மையான தந்தை திடீர் வாக்குமூலம்… வளர்ப்பு மகனா அரவிந்த் சாமி….

0
Follow on Google News

எனக்கு மாப்ள பாத்தா அரவிந்த் சாமி மாதிரி ஒருத்தன பாருங்க..” என 2000களில் கூறிய இளம் பெண்கள் பலர் உண்டு. அந்த காலத்திலேயே சாக்லேட் பாய் என்று பெயர் எடுத்தவர் இவர். அமுல் பேபி போல இருக்கும் இவரது தேகமும், இவரது தமிழ் உச்சரிப்பும் அன்றைய இளம் பெண்களை கவர்ந்தது. மணிரத்னமின் பல படங்களில் நடித்தனாலோ என்னவோ இவரை பல மங்கையருக்கு பிடித்து போனது.

இப்படி திரைவாழ்வின் உச்சத்தில் இருந்த அரவிந்த் சாமி தன் வாழ்விலும் பல்வேறு இன்னால்களை சந்தித்து பின் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வந்தவர். அரவிந்த் சாமி, ரஜினி நடித்திருந்த ‘தளபதி’ படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து அறிமுகமானார். அடுத்து, இயக்குநர் மணிரத்னமுடன் தாெடர்ந்து கைக்கோர்த்து ரோஜா, பாம்பே போன்ற படங்களில் நடித்திருந்தார்.

சாமான்யனின் வாழ்வை போலவே சினிமாவில் சாதிக்கும் கலைஞர்கள் பலரது வாழ்விலும் இன்னல்களும் துயரங்களும் துன்பங்களும் துரத்திக்கொண்டே இருக்கும். அப்படித்தான் சில விஷயங்கள் அரவிந்த் சாமியின் வாழ்வினை ஆட்டிப்படைத்தது. 90களில் பல வெற்றிப் படங்களை கொடுத்த அரவிந்த் சாமிக்கு சில படங்கள் தோல்வியாகவும் அமைந்தன. இவர் நடித்துக்கொடுத்த சில படங்கள், பணபிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆக முடியாமல் முடகத்தில் இருந்தது.

இதையடுத்து விரக்தியின் உச்சத்தை எட்டிய அவர், சினிமாவை விட்டு விலகி தனது கணவான சொந்த தொழிலை நாேக்கி ஓடினார். ஒரு பிரபல நிறுவனத்திற்கு அதிபதியாகி தனது கனவை நனவாகவும் மாற்றினார். ஆனால் இங்கேதான் விதியின் சதி விளையாடியது. 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு விபத்தில் அரவிந்த் சாமியின் முதுகுத்தண்டில் பலத்த அடி ஏற்பட்டது. இதனால், அவரது கால்கள் செயலிழந்து நடக்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டார்.

வாழ்வின் மிகவும் கடினமான தருணத்தில் இருந்த அரவிந்த் சாமி, தனது உடல்நிலையை சரிசெய்ய பல்வேறு முயற்சிகளையும் அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொண்டார். அவரது கால்கள் சரியாக 4-5 வருடம் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இவரது மனைவியும் இவரும் 7 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஆதிரா என்ற மகளும் ருத்ரா என்ற மகனும் உள்ளனர். அதன் பிறகு 2012ஆம் ஆண்டில் அபர்ணா முகர்ஜி என்பவரை மணம் முடித்தார்.

விபத்து..விவாகரத்து என தனது வாழ்வில் சில கடினமான கட்டங்களை சந்தித்த அரவிந்த் சாமி “பொருத்தது போதும் பொங்கி எழ வேண்டும்” என்பது போல மீண்டும் சினிமாவிற்குள் வந்தார். தொடர்ந்து சினிமாவில் அடுத்த ரவுண்டை தொடங்கி சாதித்து வருகிறார் அரவிந்தசாமி. தற்போது அரவிந்த் சாமி தத்து கொடுக்கப்பட்ட குழந்தை என்ற தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து அரவிந்த் சாமியின் தந்தை நடிகர் டெல்லி குமார் பேட்டி ஒன்றில் பல உண்மையை கூறியுள்ளார்.

அதாவது அரவிந்த் சாமி பிறந்தவுடன், அவரை தனது தங்கைக்கு தத்து கொடுத்துள்ளதாகவும், ஏனெனில் தனது தங்கைக்கு குழந்தை இல்லை என்பதால் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார். இதுவரை இந்த விசயம் வெளியே வராமல் இருந்த நிலையில், தற்போது டெல்லி குமார் இதனை கூறியுள்ளார். மேலும் அரவிந்த் சாமி, தங்களிடம் அவ்வளவாக பேசிக் கொள்ள மாட்டார் என்றும் தனது தங்கை குடும்பத்தினரிடம் தான் பாசமாக இருப்பார் என்று உண்மையை உடைத்துள்ளார்.

நடிகர் டெல்லி குமார் பல வெற்றி பெற்ற சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார். இவர் ஆனந்தம், மெட்டிஒலி, தலையணை பூக்கள், பாண்டவர் இல்லம் என பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்திருந்தார். ஒரு காலகட்டத்தில் இவர் நடிக்காத சேனல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்குஎல்லாவற்றிலும் இருந்தார் இவர்.

எந்த சேனல் பார்த்தாலும் இவருடைய நடிப்பும் கதாபாத்திரமும் முக்கியம் வாய்ந்ததாகவே இருந்து வந்தது. அதுவும் மெட்டிஒலி சீரியலில் அப்பா கேரக்டரில் இவர் நடித்து பலருடைய அனுதாபங்களையும், பாராட்டுகளையும் பெற்றிருந்தார். தற்போது இவர் தான் அரவிந்த் சாமியின் தந்தை என்ற‌ உண்மையை கூறியுள்ளார்.