காலையில் திருமணம்…முதல் நாள் வேறு நடிகையுடன் கமலஹாசன் உல்லாசம்..! யார் அந்த நடிகை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் காதல் மன்னன் என்று சினிமா உலகில் அழைக்கப்பட்டவர். தன்னுடன் நடிக்கும் நடிகைகளிடம் தனது ஆரம்பகட்ட சினிமா முதல் தற்போது 60 வயதை கடத்தும் கிசு கிசுவில் சிக்கி வருகின்றவர். மேலும் இவர் வாழ்க்கையில் எதையும் மூடி மறைக்கும் பழக்கம் இவருக்கு கிடையாது, தன்னுடன் கிசு கிசுவில் சிக்கும் நடிகைகளுடன் பொது இடங்களில் காட்சியளித்து நான் அப்படி தான் என தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர்.

வாணி கணபதி மற்றும் நடிகை சரிகா இருவருக்கும் மட்டும் மனைவி என்கிற அங்கீகாரம் அளித்து திருமணம் செய்து கொண்ட கமல்ஹாசன் மற்ற நடிகைகளுடன் இணைந்து வாழ்ந்து வந்தாலும் திருமணம் செய்து கொள்ளவில்லை, அந்த வகையில் சுமார் 12 வருடம் நடிகை கவுதமி உடன் ஒரே வீட்டில் கமல்ஹாசன் வாழ்ந்து வந்தாலும் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய பாட்னராக தான் சேர்ந்து கொண்டு பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இந்நிலையில் நடிகை சரிதாவை கமல்ஹாசன் காதலித்து கொண்டிருக்கும் போதே சரிதா கர்ப்பம் ஆனார். எங்கே கமல்ஹாசன் தன்னை கழட்டி விட்டுவிடுவார் என சந்தேகம் அடைந்த சரிகா. என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை கமல்ஹாசன் தான் என திருமணத்துக்கு முன்பே அறிவிக்க, வேறு வழியிற்றி கமல்ஹாசனும் ஒப்பு கொண்டு சரிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கமல்ஹாசன் வாழ்க்கையில் சரிகா உள்ளே வந்ததும் முதல் மனைவி வாணி கணபதி கமல்ஹாசனிடம் இருந்து பிரிந்தார்.

மும்பையில் படப்பிடிப்பில் இருந்த போது வாணி கணபதி உடன் நெருக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த கமல்ஹாசன் இருவரும் பிராமண குடும்பம் என்பதால் இரண்டு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நிகழ்வு முன்பையில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வந்தது. இதற்கு இடையில் நடிகர் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா உடன் நெருங்கி பழகி வந்துள்ளார். ரேகா இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர்.

இந்நிலையில் விடிந்தால் வாணி கணபதி – கமல்ஹாசன் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், முதல் நாள் இரவு முன்பையில் ஒரே அறையில் ரேகா உடன் இருந்து கொண்டு தனக்கு வாணி கணபதி உடன் திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை என தெரிவிக்க, இந்த பிரச்சனை மிக பெரியதாக வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு குடும்பத்தினரும் கமல்ஹாசன் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

இறுதியில் இயக்குனர் கே பாலச்சந்தர் பேசி கமல்ஹாசனை திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வைத்த பின்பு தான் வாணி கணபதி – கமல்ஹாசன் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த காலகட்டத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மீண்டும் கோகிலா படத்தில் நடிகை தீபா பாத்திரத்தில் நடிகை ரேகா தான் நடிப்பதாக இருந்துள்ளது, அவரை வைத்து சில கட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது, ஆனால் திடீரென அந்த படத்தில் இருந்து ரேகா விலகியது குறிப்பிட்டத்தக்கது.

திமுகவுக்கு வெட்கமாக இல்லையா.? முக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு.. எதற்கு தெரியுமா.?