நயன்தாரவை சீட்டிங் செய்த விக்னேஷ் சிவன்..! கையும் களவுமாக பிடித்து நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் ஹரி இயக்கத்தில், ஐயா படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருதேன் என்ற பாடல் மூலம் தமிழக இளைஞர்களை தன் வசப்படுத்தியவர் நயன்தாரா. வல்லவன் படத்தில் நடிகர் சிம்பு காதலில் விழுந்தவர் பின் குறுகிய காலத்தில் சிம்புவை விட்டு பிரிந்தார். இதன் பின்பு நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்ற நயன்தாராவின் இரண்டாவது காதலும் முறிந்தது.

சிம்பு மற்றும் பிரபுதேவா இருவரையும் நயன்தாரா உண்மையாக தான் காதலித்துள்ளார், ஆனால் அவர்கள் இருவரும் தான் நயன்தாராவை ஏமாற்றி விட்டதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படும் நிலையில், மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய நயன்தாரா 2015ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார், இவர்களின் காதல் சுமார் 7 ஆண்டுகளாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நயன்தாராவின் காதலில் விக்னேஷ் சிவன் விழுந்த பின்பு சினிமாவில் பெரிதாக கவனம் செலுத்த வில்லை, நயன்தாரா எங்கே சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக உடன் செல்லும் ஒரு பாதுகாவலராக, அவருடைய சினிமா கால்ஷீட்களை கவனிக்கும் ஒரு மானேஜராக. இப்படி நயன்தார உடனே பயணிக்க தொடங்கிய விக்னேஷ் சிவன் செலவுக்கு நயன்தாரா தான் பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நயன்தாராவை எத்தனை நாட்களுக்கு தான் எதிர்பார்த்து கொண்டிருப்பது. ஒருவேலை நயன்தாரா நம்மை கழட்டிவிட்டு சென்றால் பணத்துக்கு என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய விக்னேஷ் சிவன். நயன்தாரா நடிக்கும் படங்களில் அவருக்கு பேசப்பட்ட சம்பளத்தை விட அதிக தொகையை பேசி, அதில் எக்ஸ்ட்ரா பணத்தை இவர் சேமித்து, நயன்தாராவை சீட்டிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது ஒரு கட்டத்தில் இந்த விஷயம் நயன்தாராவுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் வேதனை அடைந்த நயன்தாரா, பெருந்தமையுடன் பரவாயில்லை என விட்டுவிட்டாராம். இதனை தொடர்ந்து ஏற்கனவே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து சினிமா தயாரிப்பு நிறுவனம் ஓன்று நடத்தி வரும் நிலையில், விக்னேஷ் சிவன் தனியாகவும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று துபாயில் பெரும் தொழில் அதிபர்களுடன் இணைந்து எண்ணெய் கிணறு ஓன்று நயன்தாரா வாங்க இருப்பதாக கூறப்படும் நிலையில்.

இது போன்று பல தொழில்களை தொடக்கியுள்ள நயன்தாரா, அதில் எந்த ஒரு தொழிலிலும் காதலன் விக்னேஷ் சிவனை பாட்னராக சேர்த்து கொள்ளவில்லை என கூறப்படும் நிலையில், இவர்கள் இருவரும் 7 வருடமாக காதலித்து வந்தாலும், எதிர்காலத்தில் இருவருக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், பணம் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லை என கூறப்படுகிறது.

திமுகவுக்கு வெட்கமாக இல்லையா.? முக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு.. எதற்கு தெரியுமா.?