எனக்கு வாழ்கை கொடுத்தாரா.? மது போதையில் தனுஷ் ஆணவ பேச்சு… தக்க பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்…

0
Follow on Google News

தனியார் தொலைக்காட்சியில் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறியப்பட்ட சிவகார்த்திகேயன், பின்பு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, தொகுப்பாளராக இருந்த போதே இவருக்கென ஒரு ரசிகர் இருந்தனர், தனியார் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அணைத்து டி ஆர் பி ரேட்டிங் வரிசையில் முன்னனி இடம் பிடித்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் மெரினா படத்தில் அறிமுகமான போது, படம் வெளியாகும் முன்பே மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது, இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்தார் அதனை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதன் பின்பு வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே என அடுத்த கட்டத்துக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளமும் உயர்ந்தது, அப்போது தனுஷ் தயாரிப்பில் மீண்டும் சிவகாத்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது, அப்போது இருந்தே சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாமல் அவர் மீது கடுப்பில் இருந்து வந்துள்ளார் தனுஷ்.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் பங்குபெற்ற இரவு பார்ட்டியில் மது போதையில் சிவகார்த்திகேயன் மீது உள்ள கோபத்தை சக நண்பர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார், தற்போது சிவகார்த்திகேயன் ஒரு படத்துக்கு 22 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார், ஆனால் அசூரன், கர்ணன் என மெகாஹிட் கொடுத்த தனுஷ் ஒரு படத்துக்கு 18 கோடி வரை சம்பளம் வாங்குகிறார், இந்நிலையில் நடிகர்கள் வாங்கும் சம்பள பட்டியலில் தனுஷை முந்தி சென்றுள்ளார் சிவகார்த்திகேயன்.

இது தொடர்பாக மது விருந்தில் நண்பர்கள் மத்தியில் மது போதையில் பேசிய தனுஷ் , பொடி பைய்யன் நான் வாழ்க்கை கொடுத்தவன், என்னை விட அதிகமா சம்பளம் வாங்குகிறான் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ், இந்த தகவலை அங்கே பார்ட்டியில் கலந்து கொண்ட சக சினிமா துறையை சேர்ந்த ஒருவர் சிவகார்த்திகேயன் கவனத்துக்கு கொண்டு சென்று, என்னப்பா தனுஷ் தான் உனக்கு வாழ்க்கை கொடுத்தாராமே என இரவு பார்ட்டியில் நடந்ததை சிவகார்த்திகேயனிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு சிவகார்த்திகேயன் சிறிது நேரம் சிரித்துவிட்டு, இங்கே யாரும் யாருக்கும் வாழ்க்கை கொடுக்கவில்லை, இதற்கு முன்பே நான் இதுகுறித்து பதிலளித்துளேன், எனக்கு அவர் தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம், அவரவர் உழைப்பில் தான் வெற்றி பெறுகிறார்கள், ஒரு பெரிய இடத்தில் இருக்க கூடிய நபர் தனுஷ் ஆனால் இது போன்று பேசுவது அவருடைய தகுதிக்கு அழகு இல்லை என சிவகார்த்திகேயன் பதிலளித்ததாக கூறப்படுகிறது.