பாஜகவில் இணைய நடந்த பண பேரம் எவ்வளவு. ? குஷ்பு கொடுத்த பதிலில் வாயடைத்து போன நெறியாளர்.!

0
Follow on Google News

காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு சமீபத்தில் டெல்லியில் உள்ள பாஜகவில் இணைந்தார், பாஜகவில் இணைவதற்கு சில நாட்களுக்கு முன் வரை பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த குஷ்பு திடிரென பாஜகவில் இணைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, இந்நிலையில் பாஜகவில் இணைந்ததுக்கு பின் தொடர்ந்து ஊடகங்கள் கவனத்தை ஈர்த்துள்ள குஷ்பு தனியார் தொலைக்காட்சிகளில் நேர்காணல்களில் கலந்து கொண்டு தன் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துறைத்து வருகிறார்.

அந்த வகையில் தொலைகாட்சி ஒன்றில் அவர் அளித்த நேர்காணலில், காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு விலகியது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பின், காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் கட்சியினர் குஷ்புவை அரசியல்வாதியாக பார்க்கவில்லை, அவரை ஒரு நடிகையாக தான் பார்த்தார்கள் என பேசியிருக்கிறார் அப்படியானால், தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது சரியான முடிவு தானே என தெரிவித்தவர்.

மேலும் நீங்கள் பாஜகவில் இணைய டெல்லிக்கு செல்லும் போது எதற்க்காக உங்கள் கணவரை அழைத்து சென்றிர்கள், அப்படியானால் நீங்கள் பாஜகவில் இணைய உங்கள் கனவர் பின்னனியில் இருந்ததாக கூறப்படும் தகவல் உண்மையா என நெறியாளர் கேள்வி எழுப்ப, அதற்கு குஷ்பு நான் என் கனவரை என்னுடன் அழைத்து செல்லாமல், பக்கத்து வீட்டுகாரரையா அழைத்து செல்ல முடியும் என குஷ்பு பதிலை கேட்டு சிறிது நேரம் வாயடைத்து போனார் அந்த நெறியாளர்.

தொடர்ந்து பாஜகவில் இணைய பேரம் நடந்ததா என நெறியாளர் கேள்வி எழுப்ப, ஏழு தலைமுறைக்கு உட்காந்து சாப்பிடும் அளவுக்கு நானும், என் கனவரும் சொத்து சேர்த்து வைத்துளோம், ஆகையால் பணத்துக்காக நான் ஒரு கட்சியில் பேரம் பேசி இணையவேண்டிய அவசியம் தனக்கு தேவை இல்லை பாஜக கட்சியின் மீது தனக்கு இருந்த நம்பிக்கை தான் அக்கட்சியில் இணைவதற்கு வழி வகுத்தது என குஷ்பு விளக்கம் அளித்தார்.