கள்ள உறவு திருமணமா.? மொத்தத்தையும் போட்டுடைத்த இமான்… சூடு பிடிக்கும் சிவகார்த்திகேயன் விவகாரம்..

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்க்ம் மாபெரும் வெற்றிப்பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற ஊதா கலரு ரிப்பன், பாக்காதா பாக்காதா ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிமுருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார்.

2019 ஆம் ஆண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும், டி இமானும் எந்த ஒரு படத்திலும் இணையவில்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இனி சிவகார்த்திகேயனுடன் இணைந்து வேலை செய்யமாட்டேன். அவர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் விளக்கமளித்தார்.

அதில் சிவகார்த்திகேயன் எங்களின் குடும்ப நண்பர். எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட மனிதர். எனக்கும் இமானுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது நாங்கள் பிரிந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எங்களுக்கு இடையே சமாதானம் செய்துவைக்க எல்லாவிதமான முயற்சிகளையும் செய்தார். இமான் என்னை விவாகரத்து செய்ய முடிவெடுத்தபோது, அவரை சிவகார்த்திகேயன் ஆதரிக்கவில்லை. இது இமானுக்கு பிடிக்கவில்லை.

இதைத்தான் இமான் துரோகம் என்று சொல்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அது வெளியில் வேறுவிதமாக புரிந்துகொள்ளப்படுகிறது. எங்களுக்கு உதவி செய்ய நினைத்த சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு சங்கடம் நேர்ந்துவிட்டது. எனக்கும் இமானுக்கும் பிரச்சினை ஏற்பட்ட நேரத்தில் சிவகார்த்திகேயனிடம் பேசியதுதான், அதன்பிறகு நான் அவரிடம் பேசவில்லை. என இமான் முன்னாள் மனைவி மௌனிகா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மோனிகாவை விவாகரத்து செய்த டி.இமான், கடந்த ஆண்டு மே மாதம் அமலியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அமலியா, மறைந்த கலை இயக்குநர் உபால்டுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இமான் அளித்த அடுத்த பேட்டியின் “வில்லன் யார் என்று எனக்கு தெரியும். அதனால் நான் எனக்கு ஏன் இப்படி நடந்துவிட்டது என்று கடவுளிடம் முறையிடமாட்டேன்.

நான் கருணையின் அடிப்படையில் வாழ்பவன். என்னுடைய இரண்டு மகள்களையும் நான் சென்று பார்த்துதான் வருகிறேன். ஆனால் முன்னர் மாதிரி அவர்கள் என்னிடம் ஒட்ட மறுக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வளர்ந்து என்னிடம் வந்து, அப்பா என்னதான் ஆச்சு என்று கேட்பார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்போது அவர்களிடம் சொல்வதற்கான அனைத்து விஷயங்களும் என்னிடம் இருக்கிறது.

எனது முதல் திருமணம் எனது அப்பா, அம்மா பார்த்து நடத்தி வைத்த திருமணம்தான். அது இப்படி முடிந்ததில் அவர்களுக்கும் வருத்தம். கள்ள உறவில் இல்லை. நான் இரண்டாவது திருமணம் செய்த பெண்ணும் ஏதோ கள்ள உறவில் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்தத் திருமணமும் எனது அப்பா அம்மா பார்த்து வைத்த திருமணம்தான். இன்னும் சொல்லப்போனால் குட்டி பத்மினியும், நடிகை சங்கீதா க்ரிஷ்ஷும்தான் எனக்கு இந்தப் பெண்ணை பார்த்தார்கள்” என டி இமான் தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

இந்நிலையில் டி.இமானின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி இருக்கிறது. அப்படி என்ன துரோகம் செய்தார் சிவகார்த்திகேயன் என்று ஒட்டுமொத்த இணையத்தையும் ரசிகர்கள் அலசி ஆராய ஆரம்பித்து விட்டார்கள். இமானின் முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கு காரணமே சிவகார்த்திகேயன் தான் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருவது பற்றில் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.