தக்காளி விலை தணிந்தாலும் பயமுறுத்தும் முருங்கைக் காய் விலை!

0
Follow on Google News

தமிழகத்தில் முருங்கைக் காயின் விலை கிடுகிடுவென உயர்ந்து சுமார் 180 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. பருவ மழை அதிகளவில் பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து வழக்கமாக தமிழ்நாட்டுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தக்காளி விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த வாரங்களில் தக்காளி கிலோ 120 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது சாதாரண ஏழை பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக அமைந்தது. அதையடுத்து இப்போது தக்காளி விலை குறைந்து 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் முருங்கைக் காயின் விலை உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக் காயின் விலை கிலோ 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை வியாபாரிகளிடம் இன்னும் அதிகமாக விற்பனை ஆகிறது. இது பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தியுள்ளது