காட்டி கொடுத்த காலில் அணிந்திருந்த செருப்பு… போலீசாரிடம் சிக்கிய திருடன்..!

0
Follow on Google News

கோயம்புத்தூர் : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை கொள்ளை கற்பழிப்பு என மாநில சட்டம் ஒழுங்கு கடுமையாக சீரழிந்திருப்பதாக அதிமுக மற்றும் பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கின்றன. அதற்கேற்றாற்போல தமிழகத்தில் கொலை கொள்ளை பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுபுகுந்து தொடர்ச்சியாக திருடி மக்களை பீதிக்குள்ளாக்கிய திருடர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். அப்படியும் திருடர்கள் டிமிக்கி கொடுத்தனர். அதனால் உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனிடையே கோயம்புத்தூர் மாவட்டம் முத்துக்கவுண்டன் புத்தூர் பகுதியில் நடந்த செயின்பறிப்பு சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். போலீசை கண்ட சந்தேகத்திற்கிடமான மூன்றுபேர் அருகிலுள்ள டீ கடையில் பதுங்கினர்.

அதைக்கண்ட போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது போலிஸாரிடமிருந்து மூவரும் தப்பியோடினர். அந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர்களை பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தனர். அதேநேரத்தில் பல்லடம் பகுதியில் நடந்த திருட்டுக்கும் இந்த திருட்டுக்கும் தொடர்பிருக்குமா என போலீசார் ஆய்வுமேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய ஒருவரின் செருப்பும் பல்லடம் திருட்டில் ஈடப்பட்டவரின் செருப்பும் ஒரேமாதிரி இருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சா வழக்கில் சிக்கி கைதான மருதாச்சலம் என போலீசார் தெரிந்துகொண்டனர். அதன்பிறகு கலங்கல் பகுதியில் மறைந்திருந்த மருதாசலத்தை போலீசார் கைது செய்தனர். காலில் அணிந்திருந்த செருப்பால் ஒரு திருடன் மாட்டிக்கொண்ட இந்த வினோத சம்பவம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.