இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறார்கள் இந்த சினிமா கூத்தாடிகள்..!குடும்பத்தை கொன்று ஊழியர் தற்கொலை..!

0
Follow on Google News

சென்னை பெருங்குடியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் மணிகண்டன் (36).இவரது மனைவி தாரா (35). இவர்களுக்கு தரண், தாஹன் என்ற இரண்டு சிறு பிள்ளைகள் இருந்தனர். கோயம்புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு பன்னாட்டு வங்கியான பார்க்லேஸ் வங்கியின் சென்னை கிளையில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருடத்திற்கு 28 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகளவில் பணத்தை இழந்த மணிகண்டன் தனது நண்பர்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இதன் காரணமாக சம்பவத்தன்று மனைவி தாரா கணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே, ஆத்திரமடைந்த மணிகண்டன் கிரிக்கெட் மட்டையால் தாராவை தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் இரு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொன்று தானும் லுங்கியால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஆழ்த்தியுள்ள நிலையில். இது போன்று உயிரை காவு வாங்கும் விளையாட்டின் விளம்பர படத்தில் நடிக்கும் சினிமா நடிகர்கள். அவர்களுக்கு கிடைக்கும் பணத்துக்காக இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறார்கள் இந்த சினிமா கூத்தாடிகள் என ஆன்லைன் ரம்மி விளையாட்டின் விளம்பர படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு எதிப்பு கிளம்பியுள்ள நிலையில்.

இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டின் சூழ்ச்சி பற்றி அதன் நுணுக்கங்கள் அறிந்த ஒருவர் கூறுகையில்,. ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம். அதன் RNG (Random Number Generator )அல்காரிதம் அதிநுணுக்கமாக உருவாக்கப்பட்டது. நியாயமாக இதன் வேலை ரேண்டமாக எண்களை உருவாக்கி அனுப்புவதுதான் என்றாலும், நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள்,

பண இருப்பு கரைந்ததும் எவ்வளவு வேகமாக மீண்டும் ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் வைத்து நீங்கள் அடிமையாகி விட்டீர்களா, இல்லையா என்பதையும் RNG கண்டுகொள்ளும். அடிமை என்று தெரிந்தால் அதன் அரக்க முகம் வெளிவரும். மிகமிகக் கடினமாகத்தான் கார்டுகளை (எண்களை) வழங்கும். மூன்று அல்லது நான்கு தோல்விகளுக்கு இடையே ஒரு சொற்ப வெற்றியைக் கொடுக்கும். காரணம், இது நியாயமாகத்தான் செயல்படுகிறது,

என்னுடைய கெட்ட நேரம் என்று உங்களை நம்ப வைக்கும் உத்தி தான் இது. ஆனால் உண்மையில் நீங்கள் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் வருவீர்கள் என்பதை அது நன்கு அறியும். ஒருவேளை நீங்கள் அன்இன்ஸ்டால் செய்து தப்பித்தாலும், சரியாக மூன்று நாள் கழித்து, போனஸ் பணத்தை க்ரெடிட் செய்திருக்கிறேன் வா என வலை விரிக்கும். ஆகவே அல்காரிதத்தை வென்று பணக்காரனாவது என்பதற்கு வாய்ப்பே இல்லை.

இதிலிருந்து மீள வேண்டும் என நினைப்பவர்களுக்கு, முறையான மனசிகிச்சை இன்றி இந்த மயக்கத்திலிருந்து தப்புவது கடினம். மனதின் ஓரத்தில் இதன் மீதான ஆசை இருந்து கொண்டே இருக்கும். மனைவியுடன் விஷயத்தை சொல்லிவிட்டு ஸ்மார்ட்போனை தூக்கி கடாசி விடுங்கள். நல்ல மனநல மருத்துவரிடம் பேசுங்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் சூழ்ச்சி பற்றி தெரிவித்துள்ளார்.