கள்ளக்காதலனுடன் உல்லாசம்… அழுது தொந்தரவு செய்த குழந்தையை என்ன செய்தார் கள்ள காதலி தெரியுமா.?

0
Follow on Google News

கன்னியாகுமரி : கள்ளக்காதலன் மீதுள்ள மயக்கத்தில் அவனுடன் சேர்ந்து தான் பெற்ற பிள்ளையையே கொடுமை செய்ததாக சைல்டு லைனுக்கு புகார் வந்ததையடுத்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. கள்ளகாதலுக்காக பிள்ளையை கொடுமைப்படுத்தி உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். இவரது குடும்பம் சிலவருடங்களுக்கு முன்பாக பிழைப்பு தேடி நாகர்கோவிலுக்கு இடம்பெயர்ந்தது. கிருஷ்ணம்மாள் அருகிலுள்ள வீடுகளில் வீட்டுவேலை செய்துவந்தார். அவரின் மகன் மாரிமுத்து என்பவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் முகிலா என்பவரை மாரிமுத்துக்கு மணம் முடித்து வைத்துள்ளனர்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டரை வயதில் ஒரு ஆண்குழந்தை இருக்கிறது. இதனிடையே திருப்பதிசாரம் பகுதியில் நடந்த ஒரு குற்றவழக்கில் தம்பதியினர் மீது போக்ஸோ வழக்கு பதிவுசெய்து சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். அந்த நேரத்தில் முகிலாவுக்கு போக்ஸோ வழக்கில் கைதாகியிருந்த நாகர்கோவில் சுயம்பு என்பவருடன் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.

முகிலா சிறையிலிருந்து வந்த நிலையில் மாரிமுத்து சிறையிலேயே உள்ளார். இது முகிலாவின் காதலுக்கு ஏதுவாகிப்போனது. இந்த நிலையில் முகிலாவின் குழந்தைக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது அங்கும் கள்ளக்காதல் மோகத்தில் அழுத குழந்தையை தாக்கிவிட்டு காதலை தொடர்ந்துள்ளனர்.

இந்த அருவருப்பான செயலை கண்ட சிலர் உடனடியாக சைல்டு லைனுக்கு போன்செய்துள்ளனர். விரைந்துவந்த அதிகாரிகள் முகிலா மற்றும் சுயம்புவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் ஆசாரிப்பள்ளத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.