சவுக்கு சங்கர் பின்னணியில் இருந்த எடப்பாடிக்கு சிறை உறுதி.. … பாஜக முக்கிய தலைவர் வெளியிட்ட பகீர் தகவல்..

0
Follow on Google News

தொடர்ந்து அரசியல் தலைவர்களை நாகரிகம் இல்லாமல், மிக கீழ்த்தரமாக பேசி வரக்கூடியவர் சவுக்கு சங்கர். தன்னை ஒரு பத்திரிகையாளர் என அடையாளப்படுத்தி கொண்டு, எல்லை மீறி உயர் பதவிகளில் இருக்க கூடிய அரசு அதிகாரிகள், மக்களால் தேர்தெடுத்துக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியாக இருக்க கூடிய அரசியல் தலைவர்களை விமர்சனம் என்கிற பெயரில் மிகவும் கீழ்த்தரமாக பேசி வரக்கூடிய சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதை, தமிழக முழுவதும் உள்ள பெரும்பாலானோர் வரவேற்று, கைது செய்துள்ள தமிழக போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சவுக்கு சங்கர் வேலை செய்ய தொடங்கியதும், அவருடைய நடவடிக்கை அனைத்தும் மாற்றம் கண்டது, சவுக்கு மீடியா என்கிற சேனலை தொடங்கி அதில் வேலை செய்யும் நபர்களுக்கு சம்பளம் கொடுப்பது வரை சவுக்கு சங்கருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்கிற விமர்சனம் எழுந்த போது, பலரும் எடப்பாடி பழனிச்சாமி தான் சவுக்கு சங்கருக்கு பணம் கொடுக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பலரும் நேரடியாக குற்றசாட்டுகளை வைத்தனர்.

குறிப்பாக சமீபத்தில் சவுக்கு சங்கர் ஏற்படுத்திய சர்ச்சை, குறிப்பாக தென் மாவட்டத்தில் மிக பெரிய கொந்தளிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அதாவது அக்டோபர் 30ம் தேதி வருடம் வருடம் கொண்டாடப்படும் தேவர் ஜெயந்தி விழா குறித்து சர்ச்சை கூறிய வகையில் சவுக்கு சங்கர் பேசியதற்கு பல தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது.

மேலும் கடந்த பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வந்த எடப்பாடி பழனி சாமி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசும்பொன் வந்த எடப்பாடி வாகனத்தின் மீது செருப்பு வீச்சு சம்பவமும் நடந்தது, அந்த அளவுக்கு எடப்பாடி மீது தென் மாவட்ட மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் எடப்பாடி தேவர் குருபூஜைக்கு வருவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் தான் சவுக்கு சங்கர் தேவர் குருபூஜை குறித்து, இழிவு படுத்தும் விதத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விமர்சனமும் எழுந்ததும்.

இந்நிலையில் அதிமுவுக்கு, எடப்பாடி பழனிசாமிக்கு முட்டு கொடுத்து வந்த சவுக்கு சங்கர் சமீபத்தில் கைது செய்துள்ளது குறித்து பாஜக முக்கிய தலைவர் திருச்சி சூர்யா, பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் வலம் வந்த புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள திருச்சி சூர்யா. மேலும், தான் ஏதோ யோக்கியன் போல் நீதிபதிகள்,காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை தரக் குறைவாக விமர்சிப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார் சவுக்கு சங்கர்.

தன் youtube சேனலில் கஞ்சா மற்றும் போதை பொருள் புழக்கம் பற்றி ஏராளமான வீடியோக்களை கண்டித்து பதிவு செய்தவர், கையில் கஞ்சாவுடன் கைதாகி இருக்கிறார். யோக்கிய சிகாமணி போல் வேஷம் போடும் இவரது லட்சணம் இதுதான் என தெரிவித்துள்ள திருச்சி சூர்யா. மேலும் எடப்பாடியின் எடுபிடியாக இருந்து கொண்டு தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் முக்குலத்தோர் சமூகத்தினர் தெய்வமாக வழிபடும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யாவின் குருபூஜையை கேவலமாக விமர்சனம் செய்த சவுக்கு சங்கரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்ததை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ள திருச்சி சூர்யா.

முக்குலத்தோர் சமூகத்தை அவமானப்படுத்திய போது அறிக்கை தர மறுத்த எடப்பாடி, சவுக்கு சங்கர் கைதுக்கு அறிக்கை கொடுப்பது அவரின் சாயம் வெலுத்திருப்பதையே காட்டுகிறது. சவுக்கு சங்கரை போன்று மீடியா புரோக்கரை வைத்துக் கொண்டு முக்குலத்தோர் சமூகத்தை இழிவுபடுத்த நினைத்த துரோகி எடப்பாடி பழனிசாமிக்கு கூடிய விரைவில் சவுக்கு சங்கருக்கு அருகில் இடம் காத்திருக்கிறது என பகீர் தகவலை தெரிவித்த திருச்சி சூர்யா. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க உரியவர்கள் கையில் போய் சேரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here