முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு, முதல்வர் மனைவி துர்காஸ்டாலின் பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன் எண்பதாவது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தது. மு க ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதற்கு முன்பு மத்திய நிதி அமைச்சரை கனிமொழி நேரில் சென்று சந்தித்தது.
இப்படி திமுகவின் முதல் குடும்பம் அடுத்தடுத்து பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்து வருவது, அட திமுகவுக்கும் பாஜகவுக்கும் என்னதான் நடக்கிறது என்கின்ற பரபரப்பு நீடித்து வருகிறது . கடந்த மாதம் வரை பாஜக கொண்டு வரும் மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு என முக்கிய திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்த முதல்வர் மு க ஸ்டாலின்.

தற்பொழுது டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாகத்துறை எடுத்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து முதல்வர் டெல்லி சென்றுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்த முதல் குடும்பத்தைச் சார்ந்த வர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் எப்படி முன்னாள் நிதி அமைச்சர் பா சிதம்பரம், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தூக்கி சிறையில் வைத்தது போன்று டாஸ்மாக் மெகா ஊழலில் சிக்கியுள்ள முதல் குடும்பத்தைச் சார்ந்த அந்த முக்கிய புள்ளியை வரும் 2026 சட்டசபை தேர்தலுக்குள் தூக்கி சிறையில் வைப்பதில் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உறுதியாக இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தொடர்ந்து முதல் குடும்பத்தினர் பாஜகவுடன் நடத்தி வந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பிரதமர் மோடியின் அரசியல் பயணம் என்பது இருபது வருடம் ஆர் எஸ் எஸ், அடுத்த 20 வருடம் மாநில அரசியல், அடுத்த கட்டம் தேசிய அரசியல் என தன்னுடைய வாழ்நாளை அரசியலுக்காக அர்ப்பணித்து அரசியலை நன்கு கற்றுத் தேர்ந்தவர்.
அந்த வகையில் ஒரு அரசியல்வாதி சாதுரியமாக எப்படி தான் செய்த குற்றத்திலிருந்து தப்பிப்பதற்கு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்பதை நன்கு அறிந்தவர் பிரதமர் மோடி என தெரிவிக்கும் டெல்லி வட்டாரங்கள். அந்த வகையில் திமுகவினர் உடன் சமரச பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று பிரதமர் மோடியும் அமித் ஷாவும் உறுதியாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது.
இதற்கு முன்பு மத்திய முன்னாள் நிதி அமைச்சர் பா சிதம்பரத்தையும் அரவிந்த் கெஜ்ரிவாலையும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தூக்கி சிறையில் வைத்தது போன்று, இந்த டாஸ்மாக் மெகா ஊழலில் அமலாக்கத்துறை ரேடரில் சிக்கியுள்ள முதல் குடும்பத்தைச் சார்ந்த அந்த முக்கிய புள்ளியை நிச்சயம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கைது செய்யும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், மோடிக்கும் பயமில்லை EDக்கும் பயமில்லை என்று தெரிவித்து இருந்தார், இது குறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்த போது இப்படித்தான் அரவிந்த் கெஜ்ரிவாலும் மோடிக்கும் பயமில்லை இடிக்கும் பயமில்லை என்று தெரிவித்தார், ஆனால் அவரை ED தூக்கி சிறையில் வைத்து வெளியே வந்த பின்பு ஆட்சியும் போனது அவருடைய அரசியல் வாழ்க்கையும் போனது.
அது போன்று தான் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஏற்பட இருக்கிறது என்றும், வரும் ஜூன் முதல் வாரம் அல்லது ஜூன் இறுதிக்குள் மோடிக்கும் பயமில்லை இடிக்கும் பயம் இல்லை என்று சொன்ன உதயநிதி ஸ்டாலினுக்கு தக்க பதிலடியை கொடுக்க பிரதமர் மோடி தயாராக இருப்பதாகவே டெல்லி வட்டாரங்கள் உறுதி செய்கிறது.