கொரோன நிவாரண பணியில் முழுவீச்சில் செயலாற்றி வரும் இந்திய விமான படை.!

0
Follow on Google News

கொவிட்-19 நிவாரணப் பணிகளில் இந்திய விமானப்படை தொடர்ந்து முழுவீச்சில் செயலாற்றி வருகிறது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓர் சி-17 ரக விமானம், 2021 ஏப்ரல் 24 அன்று அதிகாலை 2 மணிக்கு ஹிந்தன் விமான தளத்தில் இருந்து சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இந்த விமானம் 7:45 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைந்தது.‌

4 கொள்கலன்களில் கிரையோஜெனிக் பிராணவாயுவை நிரப்பிக்கொண்டு அந்த விமானம் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு பனாகர் விமான தளம் வந்தடைந்தது, மற்றொரு சி-17 ரக விமானம், ஹிந்தன் தளத்திலிருந்து புனே தளத்திற்குக் காலை 8 மணிக்குப் புறப்பட்டது. காலை 10 மணிக்கு புனே சென்றடைந்த அந்த விமானம், இரண்டு கொள்கலன் டாங்கிகளில் கிரையோஜெனிக் பிராணவாயுவை நிரப்பிக்கொண்டு ஜாம்நகர் விமான தளத்தை வந்தடைந்தது.

அதே சி-17 ரக விமானம் தற்போது இரண்டாவது முறையாக புனேவில் இருந்து ஜாம்நகர் வரை கூடுதலாக 2 கொள்கலன்களுடன் சென்றது, முன்னதாக ஜோத்பூரில் இருந்து ஜாம்நகருக்கு இரண்டு காலி கொள்கலன்களை ஓர் சி-17 ரக விமானம் ஏற்றிச் சென்றது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓர் சினூக் ஹெலிகாப்டரும் ஏ என் 32 ரக விமானமும் கொவிட் பரிசோதனைக் கருவிகளை ஜம்முவில் இருந்து லேவுக்கும், ஜம்முவில் இருந்து கார்கிலுக்கும் முறையே கொண்டுச் சென்றன. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் தயாரித்த இந்தக் கருவிகள், லடாக் யூனியன் பிரதேசத்தில் பரிசோதனையை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளன.